ஷாருக்கான் சொன்னதை சூர்யா ஏன் சொல்லவில்லை – ராக்கெட்டரி வசனத்தால் சூர்யாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள். வீடியோ இதோ.

0
463
surya
- Advertisement -

சமீபத்தில் சூர்யா, விக்ரம் படத்தில் Rolex கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராக்கெட்டரி’ படத்திலும் மாதவனை பேட்டி எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதே கதாபாத்திரத்தில் இந்தியில் ஷாருக்கான் நடித்து இருந்தார். அதில் ஷாருக்கான் பேசி முடித்ததும் ‘ஜெய் ஹிந்த்’ என்று தன் பேச்சை நிறைவு செய்து இருந்தார். ஆனால், தமிழில் அவ்வாறு சூர்யா கூறவில்லை. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ‘ஜெய் ஹிந்த் சொல்லவில்லை’ என்ற புதிய பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் பேசி இருந்தார். அதில் ‘இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர் நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின் நம்பி நாராயணன் சட்ட ரீதியில் போராடிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேசபக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ராக்கெட்ரி.

- Advertisement -

இந்தியில் ஜெய் ஹிந்த் சொன்ன ஷாருக்கான் :

இதை மாதவன் நடித்து இயக்கி இருந்தார். படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன் பேட்டி தரும் ஒரு காட்சி உண்டு. பேட்டி எடுப்பவர் உள்ளூர் மொழியில் பிரபலமான நடிகராக இருப்பவர். பேட்டி முடிந்ததும் நம்பி நாராயணன் ஜெய் ஹிந்த் என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் ஜெய் ஹிந்த் என்று கூறுவார்.

காயத்ரி ரகுராம் கேள்வி :

தமிழ் மொழியில் நடிகர் சூர்யா பேட்டி எடுப்பவர். ஆனால், இவர் ஜெய்ஹிந்த் என்று கூறி முடிக்க மாட்டார்.இது என்ன முரண்பாடு என புரியவில்லை? சூர்யாவுக்கு ஜெய்ஹிந்த் பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளதா? சூர்யா, ஜெய்ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையைக் கூற மாட்டார் என்றால் அது என்ன கொச்ச வார்த்தையா? ஒருவேளை அவருக்கு இந்தி தெரியாததால் அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ.

-விளம்பரம்-

மறுத்திருந்தாலோ ஹிந்தி மொழியை இலவசமாக கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். அப்படி இல்லாமல் அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்து இருந்தால் அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப்பற்று இல்லாதவர் இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம்.அதற்கு என்ன தேவையோ அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்.

சூர்யாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் :

இதற்கு சூர்யா சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிஇருந்தார். இப்படி சூர்யா மீது காயத்ரி வைத்த விமர்சனம் நெட்டிசன்கள் மத்தியிலும் பரவத்துவங்கி இருக்கிறது. சமீபத்தில் தான் சூர்யாவிற்கு சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்து இருந்தது.

சூர்யாவிற்கு எதற்கு தேசிய விருது :

இதற்கு பலரும் பாராட்டி இருந்தனர். இதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ‘ராக்கெட்டரி’ படத்தில் சூர்யா ஜெய் ஹிந்த் என்று சொல்லாததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் ‘ஜெய் ஹிந்த் சொல்லாத சூர்யாவிற்கு எதற்கு தேசிய விருது ?’ என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement