வாட்ச் மேனால் வந்த பிரச்சனை – வீட்டின் வெளியே குடுமிப்பிடி சண்டை போட்டுள்ள பிரபல நடிகர் எஸ் எஸ் ஆரின் மகள் மற்றும் மருமகளும்.

0
999
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் எஸ் எஸ் ராஜேந்திரன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் 1962 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். மேலும், இவர் தன் வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதி இருக்கிறார். இதனிடையே இவர் சூரிய நாராயண தேவர் – ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்தவர் பங்கசம்.

-விளம்பரம்-

இவரை எஸ்.எஸ்.ஆர் , கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் 1-12-1946ஆம் நாள் மணந்து கொண்டார். 1956 ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி.ஆர். விசயகுமாரியை அவ்வாண்டிலேயே எஸ் எஸ் ராஜேந்திரன் களவுத் திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரிய வந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். மேலும், இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 2014-ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.

- Advertisement -

புகழ்பெற்ற மறந்த நடிகர் எஸ் எஸ் ஆர் குடும்பம்:

இப்படி தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற மறந்த நடிகர் எஸ் எஸ் ஆரின் மகளும், மருமகளும் வீட்டுக்கு வெளியே குழாயடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் அவர்களின் வீடு சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது. இந்த வீட்டில் எஸ்எஸ் ராஜேந்திரன் மகள் லக்ஷ்மி தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு காவலாளியை நியமிப்பது தொடர்பாக மாமியார் லட்சுமிக்கும் அவரது மருமகள் சுஜைனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சண்டை போட்ட நடிகர் எஸ் எஸ் ஆர் மகள், மருமகள்:

இப்படி இருவரும் கலவரத்தில் இருக்கும் போது மருமகள் சுஜைனி தன்னுடைய மாமியாரின் பேச்சை கேட்காமல் வீட்டிற்கு புதிய காவலாளியை நியமித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார் லட்சுமி மருமகள் சுஜைனியிடம் சண்டை போட்டார். பின் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்குமே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி தலைமுடியை பிடித்துக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டார்கள். இதனால் சுற்றி இருந்த அந்த இடமே பரபரப்பாக மாறியது.

-விளம்பரம்-

காயம் அடைந்த மருமகள்:

பின் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின் அங்கு வந்த போலீசார் அவர்களை விலக்கி வைத்தனர். மேலும், சண்டையில் லக்ஷ்மியின் ஆவேசத்தால் மருமகள் சுஜைனி அதிகமாக காயமடைந்தார். இதனால் இவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்த பிறகு மருமகள் வீடு திரும்பியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே மாமியார் லட்சுமி தன்னை தாக்கியதாக சொல்லி மருமகள் சுஜைனிக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதனை தொடர்ந்து மருமகள் தன்னை தாக்கி விட்டதாக சொல்லி மாமியார் லட்சுமியும் எதிர் புகார் கொடுத்துள்ளார். இப்படி இருவர் கொடுத்த புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தில் நடித்து வெற்றி பெற்ற நாயகனாக வலம் வந்தவர் எஸ்எஸ்ஆர். தற்போது நிஜ வாழ்க்கையில் அவருடைய குடும்பத்தினரின் செயலால் மாமியார் மொத்திய மருமகள் என்று சொல்லும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement