5 நிமிஷத்துல முடிச்சிக்குறேன் யாரும் கலைந்து போக வேண்டாம். பொது மக்களிடம் கெஞ்சிய முன்னாள்  அமைச்சர்

0
721
- Advertisement -

ஐந்து நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொள்கிறேன் தயவு செய்து யாரும் கலைந்து போக வேண்டாம் என்று கெஞ்சியே முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி. பொன்னேரியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு கொண்டிருக்கும்போது அங்க அமர்ந்திருந்த மக்கள் கலைந்து  சென்றதால் அங்கு இருந்த நாற்காலிகள் காலியாக கிடந்தது. திருவள்ளூர் மாவட்டம் அடுத்துள்ள பொன்னேரியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் அவர் கூறியது:

சிறையில் இருந்து கொண்டு அமைச்சராக இருப்பது தமிழகத்தில் மட்டும் தான் நிகழ்கிறது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். அதிமுகவின் பொதுச் செயலாளர் 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி பகுதியில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக என்றும் கூறினார். இன்று முதலமைச்சர் ஆக இருக்கும் ஸ்டாலின் உங்களிடம் கொஞ்சம் மன வாக்குறுதி அல்ல 560 பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார். வந்தால் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார் என்பது கடந்த கால வரலாறு. தற்போதும் அதே போல் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது அண்ணன் புரட்சி தமிழர் செல்கின்ற இடம் எல்லாம் எப்போது உங்களுடைய ஆட்சி வரும் என்று பொதுமக்கள் எங்களை பார்த்து கேட்கிறார்கள். காரணம் அந்த நான்காம் ஆண்டு கால சிறப்பான  ஆட்சி அதற்கு முன்பு அம்மாவின் ஆட்சி சிறப்பான ஆட்சி. ஆனால் இன்றைய தினம் நடைபெறும் ஆட்சி ஒரு குடும்பத்திற்கான ஆட்சியாக நடைபெற்று இருக்கிறது. குடும்பத்திற்கு மட்டுமே பலன் தருகின்ற ஆட்சி திமுக ஆட்சி. மக்களுக்காக செய்கின்ற ஆட்சி அண்ணா திமுக ஆட்சி அம்மா ஆட்சி. டாஸ்மாக்கில் பத்து ரூபாய் எடுத்து ஸ்டாலின் குடும்பத்திற்கு செலவு செய்தது தான் நீதிமன்றம் அத்துடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக இருப்பதில் வைத்துக் கொண்டிருக்கிறது இந்த திமுக ஆட்சி என்று விமர்சித்தார்.

கலைந்து சென்ற மக்கள்:

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆன தங்கமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர். மேலும் அவரிடம் படி பழனிச்சாமியை புரட்சித்தமிழர் என்றும் அவரைப் புகழ்ந்து பேசி வந்தார். தான் பேசிக் கொண்டிருக்கும் போது மக்கள் கலைந்து சென்றதைக் கண்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி தான் ஐந்து நிமிடத்தில்

-விளம்பரம்-

பேச்சை முடித்துக் கொள்வதாகவும் அதன் பின் நலத்திட்ட உதவிகளை  பெற்றுச் செல்லுங்கள் என்றும் கெஞ்சினார். முன்னாள் அமைச்சர் தங்க மணி அவ்வளவு கெஞ்சி அப்புறம் பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டே இருந்தனர். அதன் பின்னரும் பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டே வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி காலின் நாற்களைகளை பார்த்து பேசிக்கொண்டு வந்தார் இருந்தார். அதன் பின் அவரது பேச்சை நிறுத்திக் கொண்டு நலத்திட்ட உதவிகளை அங்கிருந்த பொது மக்களுக்கு வழங்கினார்.

Advertisement