14 வயது சிறுமியின் கற்பழிப்பு வழக்கில் கைதான பார்கவ் – அவருடன் நடித்த ‘ஓ மை காட்’ நித்யா வெளியிட்ட திடீர் வீடியோ.

0
3573
bargav
- Advertisement -

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த டிக் டாக் செயலி பிரபலமானது. அதே போல இந்த டிக் டாக் செயலி மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கில் ‘Fun Bucket’ என்ற பெயரால் ஆரம்பிக்கப்பட்ட டிக் டாக் வீடியோகள் பெரும் வைரலானது. அதிலும் அந்த டிக் டாக்கில் வரும் ‘ஓ மை காட், ஓ மை காட்’ என்ற வசனம் பெரும் பிரபலம் தான்.இந்த ‘Fun Bucket’ சேனலில் பார்கவ் மற்றும் நித்யா என்ற இரண்டு நபர்கள் செய்த வீடியோக்கள் படு வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த சேனலின் ஒரு உரிமையாளரான பார்கவ், 14 வயது சிறுமையை பாலியல் கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுளளார்.

-விளம்பரம்-

பார்கவ் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியுடன் தன் காதலை தெரிவிக்க அந்த சிறுமி மறுத்ததால் அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் தன்னை காதலிக்க மறுத்தால் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். ஆரம்பத்தில் இதுகுறித்து வீட்டில் மறைத்துள்ள அந்த சிறுமி பின்னர் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளது அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதையும் பாருங்க : நேற்று நள்ளிரவில் விவேக்கின் Unseen வீடியோவை பகிர்ந்து செல் முருகன் போட்ட உருக்கமான ட்வீட்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தார் பார்க்கவ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து உள்ளார்கள். ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த செய்தி வைரலானதை அடுத்து பார்கவுடன் வீடியோ பதிவிட்டு வந்த நித்யா தான் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணா கேள்வி எழுப்பினர். இப்படி ஒரு நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நித்யா, பார்கவ் கைது செய்யப்பட்டார் என்பது உண்மைதான், ஆனால் நான் அந்த வழக்கில் எந்த வகையிலும் தொடர்புபடுத்தவில்லை. என்னைப் பின்தொடர்பவர்கள் எனக்கு செய்தி அனுப்பியதன் மூலமும் சமூக ஊடகங்களிலிருந்து இதைப் பற்றி நான் அறிந்தேன். என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள், உண்மையில் அதை பற்றி எனக்கு எனக்குத் தெரியாது.

-விளம்பரம்-

மீம் கிரியேட்டர் மற்றும் யூடியூபர்கள் எனது பெயரைப் பயன்படுத்துகின்றனர்; பிரச்சினையைப் பற்றிய எந்த உண்மையும் தெரியாமல் நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்று கருதுகிறேன். நீங்கள் இதை வேண்டுமென்றே செய்யாவிட்டால் நீங்கள் அனைவரும் இதுபோன்ற வீடியோக்களை நீக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் நித்யா.

Advertisement