தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக கௌதம் மேனன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். பிறகு இவர் மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அவதாரம் எடுத்தார். அதனை தொடரந்து இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் கூட நடித்து உள்ளார். மேலும், இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம் ‘ படத்தில் கூட நடித்து இருந்தார். தற்போது இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.
கௌதம் மேனன் இயக்கும் படங்கள்:
அதுமட்டும் இல்லாமல் இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தமிழ் சினிமா உலகில் மிக பிஸியான நபராக கௌதம் இருந்தாலும் இவரை ரசிகர்கள் காதல் மன்னன் என்று தான் அளிப்பார்கள்.
கௌதம் மேனன் படங்கள் பற்றிய விவரம்:
ஏன்னா, இவர் படங்கள் எல்லாம் காதல், ரொமான்டிக் என்று கலர் புல்லாக இருக்கும். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி படத்தை பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் வேற லெவல் ஹிட். அதுமட்டும் இல்லாமல் இவர் வாழ்க்கையில் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை இவர் படத்தில் காண்பித்து இருக்கிறார். அப்படி கௌதம் மேனன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்து தான் வாரணம் ஆயிரம். இப்படி பல விஷயங்கள் சொல்லி கொண்டே போகலாம்.
வீடியோவில் கௌதம் மேனன் கூறியது:
இந்த நிலையில் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இந்த படத்தில் சிம்பு பேசி இருக்கும் டயலாக் அப்படியே கௌதம்மேனன் வாழ்க்கையில் நடந்ததாம். இது குறித்து கௌதம் மேனன் பேட்டியில் கூறியிருப்பது, இரண்டு வருடமாக நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவர் கையை கூட நான் பிடித்தது கிடையாது. அதற்காகவே அவர் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு வேறு ஒரு பெண்ணை காதலித்தேன்.
வைரலாகும் கௌதம் மேனனின் வீடியோ:
இந்த முறை முன்னர் செய்த தவறு செய்ய கூடாது என்று நான் அந்த பெண்ணின் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதுவே பிரிவதற்கு காரணமாக இருந்தது என்று கூறி இருக்கிறார். இதே டயலாக்கை அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு பேசியிருக்கிறார். இப்படி சிம்பு பேசியிருக்கும் காட்சியையும், கௌதம் மேனன் பேசியிருக்கும் காட்சியையும் ஒன்றாக இணைத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ, உண்மையாலுமே கவுதம் மேனன் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததா? என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள்.