“விஜய் மட்டும் ஓகே சொன்னா போதும்” 11 வருட கதையை தூசி தட்டும் இயக்குனர்

0
1591
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் டீஸர் கந்த மாதங்களுக்கு முன்னரே வெளியாகிய நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் “நா ரெடி தா வரவா” என்ற பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகியிருந்தது. இந்நிலையில் லேயோ படம் வரும் ஆக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் லீயோ படத்தின் படப்பிடிப்பின் போது கௌதம் மேனனுடன் நடிகர் விஜய்க்கு ஏதாவது கதை இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் இந்த படத்தில் நடிக்கும் ஒரு நடிகனாக மட்டுமே அங்கு சென்றேன். ஆனால் ஏற்கனவே விஜய் அவர்களிடம் ஓரு கதையை கூறி வைத்திருக்கிறேன். அந்த பாடம் தான் யோஹன் அத்தியாயம் ஓன்று. அந்த கதை இவருக்காகவே உருவாக்கப்பட்டது என்றார் கௌதம் மேனன்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அந்த படம் அப்படியேதான் இருக்கிறது என்றும் விஜய் மற்றும் கிரீன் சிக்கினால் கொடுத்தால் போதும் படத்தை ஆரம்பித்து விடலாம் என்று கூறினார். இவர் இப்படி கூறியது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் கமல், சூர்யா, அஜித் போன்றவர்களை வைத்து மாஸ் படத்திதை எடுத்த இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பிறகு யோஹன் அத்தியாயம் ஓன்று படம் எடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Advertisement