ஓ பிரியா பிரியா பாடலை நினைவிருகிறதா ? 20 வருடங்களுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் மணிரத்னம் பட நடிகை.

0
1717
- Advertisement -

20 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் பட நடிகை கிரிஜா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் சில படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.அதில் சில பேர் மட்டும் தான் இறுதிவரை சினிமாவில் நீடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் சில படங்களில் நடித்தாலும் என்றென்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகை கிரிஜா. இவர் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் மத்தியில் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர். குறிப்பாக, 1989 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இதயத்தை திருடாதே படத்தின் கதாநாயகி இவர் தான்.இந்த படம் கீதாஞ்சலி என்ற படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓ பிரியா பிரியா பாடலை 90ஸ் ரசிகர்கள் நிச்சயம் மறந்து இருக்கமாட்டார்கள்.அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தது. இதற்கு பின்பு இவர் தொடர்ந்து படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பார் என்று
எதிர்பாக்கப்பட்டது.

ஆனால், அதற்கு பிறகு இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். மேலும், இவர் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அந்த காலத்திலேயே பிரபலமானார். அதற்கு பின் இவர் ஓரு சில படங்களில் மட்டும் நடித்தார். ஆனால், இதுவரை இவர் ஒரு தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. கடைசியாக இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹிருதயாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு இவர் சினிமா பக்கமே வரவில்லை. பின் நடிகை கிரிஜா லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் என்ற தகவல் மட்டும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இவர் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார். அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் இவர் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் சந்திரஜித் பெலியப்பா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை கிரிஜா அவர்கள் மதுமிதா என்ற சிங்கிள் மதர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இவர் இதுவரை தமிழில் நடிக்கவில்லை என்றாலும் இந்த ரீ என்ட்ரி மூலம் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement