அந்த படத்தினால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம், அவர் உண்மையை மறைக்கிறார் – ஞானவேல் ராஜாவின் பதில் மனு தாக்கல்

0
511
Sivakarthikeyan
- Advertisement -

பல உண்மைகளை மறைத்து தான் நடிகர் சிவகார்த்திகேயன் என் மீது தாக்கல் செய்திருக்கிறார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்திருக்கும் பதில் மனு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
sivakarthikeyan

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

சிவகார்திகேயனின் திரைப்பயணம்:

அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை ஞானவேல் ராஜா எந்த படங்களில் முதலீடு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் ஓடியது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

ஞானவேல்ராஜா மீது வழக்கு போட்ட சிவா:

இந்த படத்திற்காக ஞானவேல்ராஜா 15 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறார். மீதி 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக சிவகார்த்திகேயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடவேண்டும். இந்த பணம் செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்கில் வெளியிடு மற்றும் ஓடிடியில் வெளியிட ஆகியவற்றின் விநியோக உரிமையை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் சிவகார்திகேயன் கோரிக்கை இருந்தார்.

-விளம்பரம்-
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு.! விமர்சனம் இதோ.! -  Tamil Behind Talkies

ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் :

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது, 2003ஆம் ஆண்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த படம் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் 2018ஆம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது. சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனராக ராஜேஷ் தான் வேண்டும் என சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் மறைத்த உண்மை:

அந்த படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் இரக்கமின்றி எனக்கு அழுத்தம் தருகிறார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில் இரண்டு கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகிஸ்தர்கள் பிரச்சனையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறினார். ஆனால், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மையை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் என் மீது மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி ஞானவேல்ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Advertisement