சும்மாவே பிரச்சன வரும் இப்போ அரசியலுக்கு வேற வந்துட்டாரு பிரச்சன வராம இருக்குமா? – GOAT பாடலுக்கு எதிராக டி.ஜி.பியிடம் புகார்.

0
164
- Advertisement -

விஜய் நடித்துள்ள GOAT படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த பாடலுக்கு எதிர்க்கு தெரிவித்து புகார் அனுப்பப்பட்டு இருக்கிறது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரில் ‘ நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன்.

தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.

-விளம்பரம்-

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.

இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்

பொதுவாக விஜய் படம் என்றாலே அதற்கு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. தலைவா படம் துடங்கி இறுதியாக வெளியான லியோ படம் வரை பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் விஜய். அதிலும் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்ற போதை சம்மந்தமான வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இதனால் படத்தில் இந்த பாடல் வரிகள் நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல லியோ படம் வெளியான போது விஜய் தனது அரசியல் வருகையை அறிவிக்கவில்லை. ஆனால், GOAT படத்தின் அறிவிப்புக்கு பின்னர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கினார். மேலும், தனது 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு அரசியல் பணிகளை செய்யப் போவதாகவும் விஜய் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement