இன்று பல்வேறு படங்களில் படுபிசியாக உள்ளவர்களில் இவரும் ஒருவர்.
சந்தானத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களில் மிகமுக்கியமானவர் நடிகர் சிம்பு எனலாம்.சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் சந்தானத்தை காமெடி நடிகராக தொடர்ந்து நடிக்க வாய்ப்பளித்தார்.
அப்போது மன்மதன் படப்பிடிப்பின் பொழுது ஒரு நாள் காமெடி நடிகர் கவுண்டமணி சிம்புவிடம் "அட எல்லா படத்தையும் சின்னத்திரையில் போட்டு கலாயப்பவர் சந்தானம்"மாசக்கணக்குல நம்ம கஷ்டப்பட்டு நடிச்சு வர படத்த சின்னத்திரையில போட்டு அப்டி கிண்டல் பண்றாங்க அவரையே படத்துல நடிக்க வைக்கிறீயே பா என கேட்டாராம்.
இதன் பின் சிம்பு என்ன நினைத்தாரோ தெரியல சந்தானம் காட்சியை அதிகப்படுத்தி,
கவுண்டமணி வரும் காட்சிகளை குறைத்துவிட்டாராம் அப்போது.
இந்த நிகழ்விற்கு பின் சிம்புவிற்கும் கவுண்டமணிக்கும் இடையே ஒரு கருத்துவேறுபாடு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்ததாம்.




