பாலிவுட் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கோவிந்தா. இவரது மகன் தான் யஷ்வர்தன் அஹுஜா. இந்நிலையில் நடிகர் கோவிந்தா மகன் யஷ்வர்தன் கார் விபத்தில் சிக்கி உள்ளது. யஷ்வர்தன் விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தாப்பியுள்ளார். மும்பையில் நேற்று இரவு யஷ்வர்தன் அஹுஜா தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அமிதாப் பச்சன் பங்களா பிரதிக்ஷா உள்ள இடத்திற்கு அருகில் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கோவிந்தா மகன் யஷ்வர்தன் ஓட்டி சென்ற கார் மீது மற்றொரு கார் பக்கவாட்டில் வந்து மோதி உள்ளது. சிக்னலை தாண்டி வேகமாக வந்த மற்றொரு கார் யஷ்வர்தன் கார் மீது மோதி உள்ளது.
மோதிய அந்த கார் பிரபல இயக்குனர் பிஆர் சோப்ராவின் பேரன் ரிஷப் சோப்ராவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த போது சோப்ரா காரில் டிரைவர் மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்த நடிகர் கோவிந்தா அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனே வந்தார். மேலும், கோவிந்தா அங்கிருந்தவர்களிடம் விபத்துக்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டார்.
சோப்ராவின் கார் டிரைவர் சிக்னலை மதிக்காமல் ரெட் லைட்டை தாண்டி வந்தது தான் விபத்துக்கு காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கோவிந்தா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். இது குறித்து நடிகர் கோவிந்தா கூறியது, விபத்து குறித்து எங்களுக்கு யஷ்வர்தன் போன் செய்தவுடன் நான் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் உடனே வந்து விட்டார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். இன்னொரு டிரைவர் சிக்னலை மதிக்காமல் சென்றததால் தான் விபத்து ஏற்பட்டது என அவர்கள் கூறினர். நீங்கள் செய்தது சரியாகவே இருந்தாலும் அதற்கு ஆதாரம் தேவைப்படும். அதனால் தான் நேரில் பார்த்தவர்கள் கூறியதை நான் கேமராவில் பதிவு செய்து கொண்டேன். யஷ் கையில் காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார். பிறகு இருதரப்பினரும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.