தவறான சிகிச்சையினால் அநியாயமாக உயிர் இழந்த கால்பந்து வீராங்கனை ப்ரியா – முதன் ஆளாக குரல் நொடுத்த நடிகர்,நடிகை.

0
406
gv
- Advertisement -

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுத்ததன் காரணமாக கால்பந்து வீராங்கனை பிரியா இறந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி கொண்டு இருக்கிறது. பிரியா மரணம் குறித்து பிரபலங்கள் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. இவர் கால்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பிறகு காலில் ஜவ்வு கிழிந்து இருந்ததாக கூறி இருந்தார்கள். பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் போதும் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் பிரியா பெற்றோர் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு செல்ல முடிவு எடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

தவறான சிகிக்சை செய்த மருத்துவர்கள்:

ஆனால், அங்கு இருந்த மருத்துவர்கள், நாங்களே சரி செய்து விடுகிறோம். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறி இருந்தார்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்த பின் பிரியாவின் காலில் அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. வலியால் பிரியா துடித்த போது அவருக்கு வலி நிவாரணி ஊசிகளும், மயக்க ஊசியும் கொடுத்து இருக்கிறார்கள். இதனை அடுத்து சீனியர் மருத்துவர்கள் பிரியாவை பரிசோதித்த பிறகு பிரியாவின் காலில் ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி இருக்கிறது.

ப்ரியா மரணம்:

எனவே இறுக்கமாக கட்டுப்போட்டு அவரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து போகும் படி கூறி இருந்தார்கள். உடனடியாக பிரியாவை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தவறான சிகிச்சையை பிரியாவுக்கு செய்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த தவறான சிகிச்சைகளால் பிரியா இறந்து இருக்கிறார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ஜிவி பிரகாஷ் டீவ்ட்:

இதனை அடுத்து பிரியாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக தான் என்னுடைய மகள் இறந்துவிட்டார் என்றும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், “என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்”தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள்.

சாக்ஷி அகர்வால் டீவ்ட்:

நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள். அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya என கூறி இருக்கிறார். இவரை அடுத்து பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான சாக்ஷி அகர்வால், அலட்சியமாக நடந்து கொண்ட அந்த மருத்துவரையும் அவர்களது மாபியா உலகத்தையும் நினைத்தாலே வெட்கமாக இருக்கு. கண்டிப்பாக அவர்களது லைசென்ஸ் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி பிரியாவின் மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தும் ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

Advertisement