ஏ.அல். அழகப்பனின் பேரனும் இயக்குனர் விஜயின் சகோதரியின் மகன் ஹமரேஷ் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் பல பேர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோ ஹீரோயினியாக கலக்கி வருவது வழக்கமான ஒன்றுதான். பேபி ஷாலினி தொடங்கி தற்போது மீனாவின் மகள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து பிற்காலத்தில் முன்னணி நடிகர்களாக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் பேரனும், நடிகர் உதயா, இயக்குனர் விஜயின் சகோதரியின் மகனுமான ஹமரேஷ் அவர்கள் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடிக்கும் படத்தின் பெயர் ரங்கோலி. இந்த படத்தை வாலி மோகன் தாஸ் தான் இயக்கி இருக்கிறார். மேலும், ஹமரேஷ் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார்.
ஹமரேஷ் திரைப்பயணம்:
குறிப்பாக விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெய்வத்திருமகள் படத்தில் சுட்டி பெண் சாராவுடன் வகுப்பு தோழனாக, இன்னொரு குறும்புக்காரனாக நடித்திருந்த சிறுவன் தான் ஹமரேஷ். அதற்க்கு பிறகு இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகின மாநகரம் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் லோகேஷ் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார்.
ரங்கோலி படம்:
முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. மேலும், இந்த படம் முழுவதும் வரும் கடத்தப்பட்ட சிறுவன் கதாபாத்திரத்தில் ஹமரேஷ் நடித்திருந்தார்.தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் ஹமரேஷ். இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் பள்ளி மாணவர்களின் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
இசை வெளியீட்டு விழா:
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாளம் மொழியை சேர்ந்த இளம் நடிகை பிரார்த்தனா நடிக்கிறார். இவருக்கும் இதுதான் தமிழில் முதல் படம். இந்த படத்திற்கு கேஸ் எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் ஹமரேஷ் சொன்னது:
இதில் பட குழுவினர் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அப்போது விழாவில் நடிகர் ஹமரேஷ், உங்களுடைய ஆதரவு எங்கள் எல்லோருக்கும் வேண்டும். வாலி அண்ணா அவருக்கு படம் தான் முக்கியம். படம் நன்றாக வர அவர் ரொம்ப கடுமையாக உழைத்திருக்கிறார். பிரார்த்தனாவிற்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.