இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் எதிர்ப்பாளர்கள் எவரும் இன்றி ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட போட்டியாளர் என்றால் அது ஹரிஷ் என்று கூறலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் போட்ட முதல் ட்வீட் என்னவென்றால், "வணக்கம், மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, பிக் பாசில் நடந்த ஒவ்வொரு விஷயமும் எனக்கு மகிழ்ச்சியளித்தது. அந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையே மாற்றி அமைத்துவிடாது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி" என்று கூறியுள்ளார்.





