நா.முத்துக்குமாரின் சாமி பட பாடலுக்கு 19 ஆண்டுகளாக அர்த்தம் தெரியாமல் இருந்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ்.

0
455
Saamy
- Advertisement -

நா. முத்துக்குமாரின் சாமி பாடலுக்கு இது நாள் வரை அர்த்தமே தெரியாமல் இருந்தேன் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் “சாமி’.

-விளம்பரம்-

இந்த படத்தில் திரிஷா, விவேக்,விஜய் குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மேலும், சாமி படம் விக்ரம் மற்றும் ஹரி அவர்களுடைய கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாகும். வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பினை சாமி படம் கொடுத்தது. மேலும், படத்தில் வெளியான பாடல்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்தி இருந்தது.

- Advertisement -

சாமி படம்:

அதிலும், விக்ரமின் அறிமுக பாடலான திருநெல்வேலி அல்வாடா! என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இந்த பாடல் வரிகளை மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் தான் எழுதியிருந்தார். இந்த பாடலுக்காக அவர் இரண்டு நாட்கள் திருநெல்வேலியிலேயே தங்கி இருந்து அங்கிருக்கும் முக்கியமான விஷயங்களை அறிந்து அதற்கு பிறகு தான் இந்த பாடலை எழுதியிருந்ததாக கூறியிருந்தார்.

சாமி படம் பாடல்:

மேலும், இந்த பாடலில் ‘பாளையங்கோட்டையில் ஜெயிலில் பக்கம் ரயிலு கூவும்’ என்ற வரி இடம் பெற்றிருக்கும். அதாவது, பாளையங்கோட்டில் சிறை சாலையை ஒட்டி ரயில் தண்டவாளம் இருக்கிறது. ரயில் போகும்போது அடிக்கடி அதன் சத்தம் கேட்கும். இதை தான் முத்துக்குமார் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த வரியையும் அதற்கேற்ற வீடியோவையும் இணைத்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஹாரிஸ் ஜெயராஜ் டீவ்ட்:

இந்நிலையில் இதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டேக் செய்து, இவ்வளவு நாள் இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. நன்றி என்று பதில் போட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவும், வீடியோவும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல தமிழ் திரைப் படங்களுக்கு பின்னணி இசையும், பாடல்களும் பாடி இருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த தி லெஜெண்ட் படத்திற்கு இவர் தான் இசை அமைப்பாளராக பணி புரிந்து இருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் தான் படத்தின் கதாநாயகன். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் பல படங்களில் பிசியாக பயணித்து வருகிறார்.

Advertisement