‘அவர் இயக்குனரே இல்ல, புரோக்கர்’ என்று பிரபல இயக்குனரை விமர்சித்த நெஞ்சிருக்கும் வரை பட நடிகை.

0
518
- Advertisement -

‘அவர் இயக்குனரே இல்ல, பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்’ என்று பிரபல இயக்குனரை தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பூனம் கவுர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். பேஷன் டிசைனிங் படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் நுழைந்தார். இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

அதன் பின் தமிழில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், முதல் படத்திலேயே பூனம் கவுர் தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவர் உன்னை போல் ஒருவன், பயணம், வெடி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பவன் கல்யாணின் இசை விழா:

இந்தியிலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூனம் கவுர் அவர்கள் பிரபல இயக்குனரை விமர்சித்து பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் பவன் கல்யாணின் ’பீம்லா நாயக்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவில் பவன் கல்யாண் பேசி இருந்தார். இந்த நிலையில் பவன் கல்யாண் பேச்சால் தான் ஈர்க்கப்பட்டதாகவும்,

பூனம் கவுர் பதிவிட்ட பதிவு:

பவன் கல்யாணின் மிகச்சிறந்த பேச்சுகளில் ஒன்று என்றும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த நடிகை பூனம் கவுர் பதில் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நடப்பதெல்லாம் ஒன்றுமே தெரியாதது போல் புன்னகைத்தபடி தவறான வேலைகளை செய்யும் ஒரு இயக்குனர். இன்னொருவர் தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்தி கொள்பவர்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி:

அரசியல் ரீதியாக இழிவுபடுத்துவது இவர்களுக்கு கை வந்த கலை. இந்த இரண்டு இயக்குநர்களும் பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்கள் என்று கூறியுள்ளார். இப்படி பூனம் கவுர் விமர்சித்து இருக்கும் நபர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா என்பது தெரிகிறது. ஆனால், இன்னொரு இயக்குனர் யார் என தெரியவில்லை? இது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது பூனம் கவுர் பதிவிட்ட பதிவுக சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வைரலாகும் பூனம் கவுர் பதிவு:

இதை பார்த்த நெட்டிசன்கள் எல்லோரும் நெட்டிசன் என்ன ஆனது? உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? என்று பல்வேறு விமர்சனங்களை எழுதி வருகிறார்கள். இப்படி சினிமா துறையில் நடிகைகள் பலரும் பல பிரச்சனைகளுக்கு அவதிப்பட்டு வரும் காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் பூனம் கவுர் பதிவிட்டு இருக்கும் பதிவு டோலிவுட் திரையுலகில் பயங்கர சர்ச்சை கிளப்பி வருகிறது.

Advertisement