மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு ஹெய்ந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். அந்த படத்தில் பள்ளி பருவ பெண்ணாக வளம் வந்த இந்த கேரளத்து பைங்கிளிக்கு தற்போது கடல் வந்துவிட்டது என்று கிசு கிசுக்க படுகிறது.
பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது. மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு ஆண் நபருடன் இருப்பது போன்ற ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் உள்ள நபர் யார் என்று தெரியாததால் அது அனுபமாவின் காதலர் என்று அடித்து விட்டனர்.
இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சாய் தரம் தேஜ் என்பவராம். தற்போது அவருடன் தான் நடிகை அனுபமா “தேஜ் ஐ லவ் யூ” என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.