க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கி வெளியிட மிஷ்கினுக்கு தடை..!

0
3153
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதை காலங்கள் படங்களை இயக்குபவர் இயக்குனர் மிஸ்கின். இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

-விளம்பரம்-

கேப்டன் பிரபாகரன், சின்னகவுண்டர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்த பைனான்சியர் ரகுநந்தன், தன் மகனை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்காக, இயக்குனர் மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது.

- Advertisement -

ஒப்பந்தப்படி 2016 ஏப்ரலில் படம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதே கதையை பயன்படுத்தி  வேறு  படம் எடுத்து வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி பைனான்சியர் ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு  திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

-விளம்பரம்-

Advertisement