ஆதிபுருஷ் படத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு – என்ன காரணம் தெரியுமா?

0
1753
- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் ஹைதராபத் திரையரங்கு ஒன்றில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஆதிபுரூஸ் படத்தைப் பற்றி தவறாக கூறிவிட்டார் என பிரபாஸின் ரசிகர்கள் அந்த நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 2004 ஆம் ஆண்டு வர்ஷம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு வந்தவர் பிரபாஸ், ஆனால் 2015 ஆம் ஆண்டு ராஜமௌாலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் நடித்ததன் மூலமாக இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தனக்கென்ன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர்.

-விளம்பரம்-

படத்தின் பெருமளவில் எதிர்ப்பாக்கபட்டது

அதன் பிறகு நடிகர் பிரபாஸ் ஆக்சன் காட்சிகள் அதிகம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் நினைத்த அளவிற்கு வெற்றி படங்களாக அமையவில்லை என்ற நிலையில் தான் மீண்டும் பாகுபலி போல ஒரு பிரம்மாண்ட படமாக தயாராக இருந்த ஆதிபுரூஸ்சில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகளவில் பெற காரணம் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிப்பதாலும், என்னதான் ராமாயண கதைகளத்தில் பல படங்கள் உருவாகியிருந்தாலும் நவீன படப்பிடிப்பு கருவிகளை பயன்படுத்தி இந்த படம் உருவாக்குவதால் ரசிகர்கள் பெரிதாகவே எதிர்பார்த்துனர்.

- Advertisement -

மோசமான ட்ரயலர் காட்சிகள்

அதன் பின்பு சில மாதங்களுக்கு முன்பாக ஆதிபுரூஸ் படத்தின் டைல் ட்ரைலர் வெளியிட்ட பொழுது அந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆம் 3D தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபொருள் திரைப்படத்தின் ட்ரெய்லர் கிராபிக்ஸ் மிகவும் மோசமான முறையில் இருந்ததாகவும் பொம்மை படங்களுக்கு இணையாக கூட இது இல்லை எனவும் அதற்கும் கீழ் மட்டமான காட்சிகளாக உள்ளது என்ற அளவிற்கு அனைவராலும் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது.

அதன் பின்பு ஆதிபுரூஸ் பட குழுவினர் மீண்டும் படத்தை மெருகேற்றி சரியில்லை என்று சொல்லப்பட்ட கிராபிக்ஸை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி பிரமண்டமாக திரைக்கு வரும் என்று கூறினார்கள். இந்நிலையில் மெருகேற்றப்பட்ட கிராபிக்ஸ்ஸுடன் ஜூன் 16 ஆம் தேதி ஆதிபுரூஸ் திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் வெளிவந்தது. பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இந்த படத்தினை கொண்டாடும் வகையில் பிரபாஸின் தீவிர ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் காளை முதல் வெடி வெடித்து கோலகலமாக கொண்டாடி வந்தனர்.

-விளம்பரம்-

படம் சரியில்லை என கூரியவரை அடித்த ரசிகர்கள்

இந்த நிலையில் படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் படத்தை பற்றி கேட்பதற்காக செய்தியாளர்கள் குவிந்த நிலையில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு இளைஞரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டனர். அவர் படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்திற்கு சுத்தமாக பொருந்தவில்லை எனவும் படத்தின் அனுமனின் பின்னனிஇசையே தவிர எதுவும் சரி இல்லை எனவும், வீடியோ கேம் போல் உள்ளது என கூறி இருக்கிறார். இதை கேட்ட பிரபாஸின் தீவிர ரசிகர்கள் அந்த நபரின் மேல் பாய்ந்து அவரை அடித்து உதைத்து துவம்சம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் அவரை காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Advertisement