சினிமா துறையில் இருக்கும் சில மூன்றாம் கட்ட நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஆபாச படங்களில் கூட நடித்திருக்கிறார்கள். ஆனால், பிரபலமான நடிகையான ராதிகா அப்டே, சினிமாவில் நடிக்க துவங்கும் முன்னர் பணத்திற்காக ஆபாச காட்சிகளில் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவை சேர்ந்த ராதிகா அப்டே, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், 2013 ஆம் ஆண்டு கார்த்திக் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கும் முன்னாள் ஹிந்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா அப்டே ” கோலிவுட் முதல் பாலிவுட் வரை வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளை சிலர் தவறாகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். அதே போல தான் நானும் சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது பல பிரச்னைகளை சந்தித்தேன்.
ஆரம்பகாலத்தில் பணத்திற்காக ஆபாச காட்சிகளில் கூட நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன், நான் நடிக்கவே கூடாது என்று நினைத்த படங்களில் கூட பட வாய்ப்பிற்காக அந்த மாதிரியான படங்களில் கூட நடித்தேன். ஆனால், தற்போது கதைக்கு முக்கியதுவும் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறேன்’ என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.