நல்ல சீரியலை இப்படி பண்ணிடீங்களே வெக்கமா இல்ல, மிஸ் யூ சாதனா – கலர்ஸ் தமிழ் சேனலை திட்டி தீர்த்த ரக்ஷிதா.

0
779
rachitha
- Advertisement -

சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. . இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகுவதாகஅறிவித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விஜய் டிவிகும் ரஷிதாவிற்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தான் ரஷிதாவை திடீரென்று நீக்கியாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ரஷிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெடு நீண்ட விளக்கத்தை போட்டு புலம்பி தள்ளி இருந்தார்.

- Advertisement -

NINI தொடரில் இருந்து விலகல் :

அதிலும், ன் இந்த தொடரில் இருக்கிறேனா? இல்லையா? என்று எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அதனால் பெரிதாக யாரும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், நாம் நமக்கு இருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். வழக்கம் போல் நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இது சொல்ல மறந்த கதை :

இப்படி ஒரு நிலையில் தான் இவர் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடரில் கமிட் ஆனார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து வந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது.இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை திடீரென்று நிறுத்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

திட்டி தீர்த்த ரக்ஷிதா :

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி மூலம் புலம்பி இருக்கும் ரஷிதா ”இது சொல்ல மறந்த கதை’ தொடரின் ‘சாதனா’ கதாபாத்திரம் இப்படி முடிவடையும் என நான் நினைக்கவில்லை. நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துகள் கலர்ஸ் டிவி. நாங்கள் உங்களுடைய போலியான புரொமோஷனிலிருந்தாவது இனிமேல் ஃப்ரீயாக இருக்கலாம். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என்று என்னை பார்த்து சிரித்த அனைவரையும் திட்டி இந்த சீரியலில் கமிட்டானேன்.

நீங்கள் பண்ண வரைக்கும் போதும் :

ஆனால், இன்று நான் தான் தவறான முடிவெடுத்திருக்கிறேன் என்று கலர்ஸ் தமிழ் நிரூபித்து விட்டது, வெட்கமாக இல்லையா. தயவு செய்து உங்கள் குறைகளை நடிகர்கள் மீது போடாதீர்கள். நீங்கள் பண்ண வரைக்கும் போதும் நல்லா இருங்க. சாதனாவை நான் மிகவும் மெஸ் செய்கிறேன்.இந்த கார்ப்பரேட் உலகத்தில் யாராலும் நிலைத்திருக்க முடியாது… குட் பை சாதனா என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை நேரடியாக விமர்சித்து இருக்கிறார்.

Advertisement