நாங்கள் அதை செய்யாமல் இருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்து கொண்டு இருப்பார் – ஆ.ராசா பரபரப்பு.

0
1222
- Advertisement -

தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா புதுச்சேரி தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திராவிட தத்துவம் இன்னும் 100 ஆண்டுகளையும் தாண்டி செல்வதற்கான அடித்தளத்தை தந்த தத்துவத் தலைவராக இன்று அவர் உயர்ந்திருக்கிறார். அதனால்தான் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். என்று கூறி அதன் பின் சனாதனம் பற்றி பேசினார்.

-விளம்பரம்-

ஆ. ராசா கூறியது:  

இவ்வளவு சமத்துவம் பேசும் இந்த கட்சிக்கு தலைவராக இருந்து இருப்பவர் சனாதனம் என்றால் என்ன தெரியுமா?  ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி சொல்வது சனாதனம். பெண்ணுக்கு உரிமை இல்லை என்று சொல்வது சனாதனம். பத்து வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சனாதனம். பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என்பது சனாதனம். கணவன் இறந்து விட்டால் நீயும் அந்த சிதையிலேயே செத்துப் போ என்று சொல்வது சனாதனம். இது எல்லாம் எங்களுக்கு தேவையா? இதுவெல்லாம் என்னவென்று தெரியாமல் தமிழிசை கூறுகிறார்.

- Advertisement -

வைக்கத்தில் போராட்டம் யாருக்காக நடந்தது. இந்து மதத்தில் எல்லா சாதிக்கு இங்கு இழிவு இல்லாமல் இருந்தது .இந்த பிராமினியாத்தாள். எல்லாவற்றையும்  தாண்டித்தான் வந்திருக்கிறோம் முதலில் சமாதானம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இது அனைத்தும் தான் சனாதனம். இந்த சாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் பெரியாருக்கு விரோதி இந்த சனாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் அண்ணாக்கு விரோதி இந்த சனாதனத்தை நான் ஏற்றுக் கொண்டால் சக மக்களுக்கு விரோதி. சாதனத்தை ஏற்றுக் கொண்டால் கலைஞருக்கு விரோதி.

இந்த சாதனத்தை ஏற்றுக் கொண்டால் அம்பேத்கர் விரோதி. இந்த சனாதனத்தை நான் ஏற்றுக் கொண்ட நான் மனிதன் அல்ல. இதற்கு எங்களுக்கு என்ன பயம் நீ முதலில் படித்துவிட்டு வா. நான் மத்திய அமைச்சருக்கு பொதுவெளியில் சொல்கிறேன் பாரதிய ஜனதா கட்சியில் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் நீங்களாகவே வாருங்கள். திறந்த வெளியில்டெல்லியில் ஒரு போராட்டத்தை வைத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் பேர் கூடட்டும் நீ சனாதனம் பற்றி பேசு நான் சனாதன எதிர்ப்பு பற்றி பேசுகிறேன். நீ சரியா நான் சரியா என்பது இந்த தேசத்தில் உள்ள  உள்ள அனைத்து மக்கள் தீர்மானிக்கட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தயார். நீங்கள் தயாரா?

-விளம்பரம்-

சனாதனத்தை நாங்கள் அழித்தால் தான் அமித் ஷா இன்று மத்தியில் உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இல்லையென்றால் நீ வேறு வேலையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் சமாதானம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழ்யிசை இன்று கவர்னர். இல்லையென்றால் அவர் வேற வேலையே தான் செய்து கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இந்த சாதனத்தை வைத்ததால் தான் வானதி சீனிவாசன் இன்று வக்கீல் அண்ணாமலை இன்று ஐபிஎஸ் அதிகாரி. இல்லையென்றால் அவர் ஆட்டை தான் மேய்த்து கொண்டு இருப்பார்.

நாங்கள் உழைத்த சனாதானத்தால் அந்த அமர்ந்து கொண்டு சனாதனம் சனாதனம் என்று கூறுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா.?  உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீங்கள் படித்திருக்கிறீர்களா. படித்தவனின் அறிவு சமூகத்திற்கு எதிராக போனால் அவன் மிருகத்தை விட  கொடூரமானவர் என்று சொன்னார் அம்பேத்கர். பாஜகவில் அமைச்சர் அவர்களே பிரதமர் மோடி அவர்களே உங்களுடைய அறிவு சமூகத்திற்கு எதிராக போதுமே ஆனால் அது அம்பேத்கர் சொன்னதே போல் தான் உங்களுக்கு பொருந்தும். நான் திறந்தவெளியில் கூறுகிறேன் பாஜகவில் உள்ள அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் உள்ள மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அவர்களை விட ஆங்கிலேயர்கள் சிறப்பானவர்கள்.

Advertisement