இசை முக்கியமா வரி முக்கியமா? அன்றே இளையராஜா கொடுத்துள்ள பதில். இதோ வீடியோ.

0
213
- Advertisement -

இசை முக்கியமா? வரி முக்கியமா? என்ற சர்ச்சைக்கு இளையராஜா கொடுத்திருந்த பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து, சமீப காலமாக இசை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்ற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. இசையும், பாடல் வரிகளும் சேர்ந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் இசைஞானி இளையராஜாவை தான் மறைமுகமாக விமர்சித்து பேசி இருக்கிறார் என்று விவாதங்கள் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கங்கை அமரன், எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும்.

- Advertisement -

கங்கை அமரன் வீடியோ:

அவருடைய பாடலுக்கு அதிகமாக புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழ வைத்தது இளையராஜா தான். இதனால் இளையராஜாவின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து வணங்க வேண்டும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரை இருந்திருக்காது. நான் அவருக்கு சவால் விடுகிறேன். இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது.

வைரமுத்து குறித்து சொன்னது:

இசையில்லாமல் பாடல்கள் கிடையாது. தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர்கள் இங்கே யார் இருக்கிறார்? அதை இவர் தான் செய்கிறார். நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார் வைரமுத்து. இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் பேட்டியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடல் என்பது இசையும், மொழியும் தானே? அதை எப்படி பிரித்து பார்க்க முடியும். நம்முடைய தனிப்பட்ட ஆளுமைகளை பற்றி பேசவில்லை, விமர்சிக்கவில்லை. ஏன்னா, அதனால் ஒரு பயனும் கிடையாது. ஆனால், பாடலுக்கு இசையா? மொழியா? என்று பார்த்தால் இசையில்லாமல் பாடலில்லை, பாடல் இல்லாமல் இசை இல்லை. இப்படி பிரிக்க முடியாத இரண்டை வைத்துக்கொண்டு எதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்காங்கன்னா அது தனிப்பட்ட மோதல்.

இளையராஜா பதில்:

இரண்டு ஆளுமையின் உரசல்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக இளையராஜா ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில், இது ரொம்ப கஷ்டமான கேள்வி தான். ஒரு பாடல் மக்கள் மனதில் பதிவதற்கு காரணம் இசை தான். ஒரு கவிதையை சொல்லும்போது அதில் ஜீவன் இருக்காது. அதே இசையுடன் சொல்லும் போது அதற்கு ஜீவன் இருக்கும். உடலும் உயிரும் சேர்ந்தது தான் பாடல். உடலுக்கு தேவை உயிர். அந்த உயிர் தான் இசை என்று கூறியிருக்கிறார்.

Advertisement