இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ் – என்ன கூறியுள்ளது பாருங்க (ராஜாவின் ராஜா தந்திரம் எல்லாம் வீனாபோச்சே )

0
782
Ilayaraja
- Advertisement -

இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனால் இவருக்கு பல விருதுகள் கிடைத்து உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க,

-விளம்பரம்-

சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றது. இப்படி இளையராஜா மோடியை புகழ்ந்து பேசியதற்கு அரசிடமிருந்து வந்த கடுமையான நெருக்கடி தான் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இளையராஜா சம்மன் குறித்த தகவல்:

அது என்னவென்றால், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டல அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சீனியர் இன்டலிஜன்ஸ் ஆபீசர், பிப்ரவரி 28 ஆம் தேதி இளையராஜாவின் முகவரிக்கு இளையராஜாவின் பெயர் குறிப்பிட்டு ஒரு சம்மன் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது, நீங்கள் உங்களுடைய சேவை வரி கட்டாத காரணத்தால் சேவை வரி புதிய தடுப்பு சட்டத்தின்படி எங்களது சென்னை மண்டல அலுவலகத்தில் நீங்கள் விசாரணைக்காக மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும்.

ilayaraja Gets Two Times Gst Summon | இளையராஜாவிற்கு சம்மன்

சம்மன் அனுப்ப காரணம்:

உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீங்கள் வரும்போது எடுத்து வரவேண்டும். சென்ட்ரல் எக்சைஸ் சட்டம் 1944 பிரிவு 14, பைனான்ஸ் ஆக்ட் 1994 பிரிவு 83, ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவுகள் 70, 174 ( 2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நீங்கள் 2022 மார்ச் 10ஆம் தேதி காலை உங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டலத்தில் இருந்து சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், இளையராஜா போகவில்லை. பின்னர் மீண்டும் ஜிஎஸ்டி புலனாய்வு துறையில் இருந்து மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சம்மனை நிராகரித்த இளையராஜா:

அதே காரணங்களை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையும் இளையராஜா ஆஜராகவில்லை. தற்போது வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்க கோரி மூன்றாவது முறையும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மூன்று சம்மன்ங்களும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் ஜிஎஸ்டி புலனாய்வு துறை அலுவலகத்தில் சர்ச்சை எழுந்து உள்ளது.

இளையராஜாவுக்கு இறுதி நோட்டீஸ்:

இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள் இறுதி நோட்டீஸ்ஸை இளையராஜாவுக்கு அனுப்பி உள்ளனர். காரணம், இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார். ஆனால், அந்த வரியை அவர் ஜிஎஸ்டி ஆணையத்திடம் அவர் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2013 -14 ஆம் நிதியாண்டில் வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை என இளையராஜா பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக ஜிஎஸ்டி புலனாய்வு துறை அலுவலகத்தில் இளையராஜா விளக்கம் கொடுக்க சொல்லி இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement