தான் பிறந்த சொந்த மாவட்டத்தில் பல லட்சம் செலவில் இளையராஜா செய்துகொடுத்துள்ள விஷயம்.

0
1642
ilayaraja
- Advertisement -

ஒன்பது லட்சம் ரூபாயில் மின்விளக்கை இளையராஜா அமைத்துக் கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.

-விளம்பரம்-

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இளையராஜா இசைப்பயணம்;

அதோடு இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் தேசிய விருது, பத்மபூஷன் உட்பட பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் இசை அமைத்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ஆர் யூ ஓகே பேபி படத்திற்கு இளையராஜா தான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இளையராஜாவுக்கு கிடைத்த பதவி:

தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். அதன் பின் இளையராஜாவுக்கு மோடி அவர்கள் Mp சீட் கொடுத்து இருந்தார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம்.

-விளம்பரம்-

அரசியலில் இளையராஜா:

அதனடிப்படையில் இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எம்.பி. இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படி அடுத்தடுத்து இளையராஜாவிற்கு மத்திய அரசில் இருந்து கௌரவம் குவிந்து வருகிறது. அதோடு இளையராஜாவும், பிரதமர் மோடி நடத்தும் நிகழ்ச்சிகளிலும், பாஜக நடத்தும் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

இளையராஜா செய்த உதவி:

தற்போது இளையராஜா அரசியலில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இளையராஜா செய்திருக்கும் செயலை மக்கள் பாராட்டி வரும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, தான் பிறந்த சோனா மாவட்டமான தேனீ மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைக்கும் பணியில் இளையராஜா இறங்கி இருக்கிறார். இதற்கு அவர் ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படத்தை இளையராஜா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் இளையராஜாவை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement