மாமன்னன் படத்தை இமான் அண்ணாச்சி வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. ‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி. அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தில் தான்.
இமான் அண்ணாச்சி திரைப்பயணம்:
அதன் பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, சிங்கம் 2, காக்கிசட்டை போன்ற படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இமான் அண்ணாச்சி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
புது பேஷண்ட் ப்ராண்ட்ஸ்… pic.twitter.com/UmquI5b3Ax
— U2 Brutus (@U2Brutus_off) July 12, 2023
இமான் அண்ணாச்சி நடித்த படங்கள்:
அந்த வகையில் சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி, நடித்த “நான் கடவுள் இல்லை” என்ற திரைப்படத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ரோகினி, சரவணன், சாக்ஷி அகர்வால், போன்றோர் நடித்திருந்தார்கள். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது. இதன் பிறகும் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இமான் அண்ணாச்சி நடித்திருக்கும் ஒரு படத்தின் பிரீ ரிலீஸ் விழா நடந்திருக்கிறது.
விழாவில் இமான் அண்ணாச்சி:
அந்த விழாவில் இமான் அண்ணாச்சி கூறியிருந்தது, இன்றைய கால சினிமா ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நிறைந்த திரைப்படம் ஆகவே அதிகமாக வெளியாகி வருகிறது. மேல் தட்டு, கீழ்தட்டு என தட்டு தட்டாக பிரித்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவிற்கு இது ஒரு நல்ல முன்னேற்றம் இல்லை. காரணம், தற்போது மக்கள் ஜாதி பாகுபாடு எல்லாம் கடந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது ஜாதியை தூக்கிப் பிடிப்பது மாதிரியான படங்கள் எடுத்து வருவது வருத்தத்திற்கு வழி செய்யும் ஒரு விஷயமாக இருக்கிறது.
சாதி படம் குறித்து சொன்னது:
இப்போதெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே காரி துப்பும் திரைப்படம் தான் பெரும் வெற்றி படமாக அமைகிறது. அந்த காலத்தில் எல்லாம் 100 நாள், 200 நாள் ஓடிய திரைப்படத்தின் இயக்குனர்கள் கூட இப்படி படம் எடுக்க மாட்டார்கள். ஜாதியை வைத்து படம் எடுத்தால் மக்களிடையே ஒரு கிளர்ச்சி உருவாகும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களைப் பார்த்து நன்றாக கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் மாரி செல்வராஜ் வெளியிட்ட மாமன்னன் படத்தை தான் இவர் ஜாட மாடயாக பேசி இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறது.