sk ரொம்ப டீசண்ட்டான ஆளு, அவர் அப்படி பணத்துல என்ன தப்பு இருக்கு? – இமான் முன்னாள் மனைவி விளக்கம்.

0
1930
Imman
- Advertisement -

சிவகார்த்திகேயன் மீது செலுத்தப்பட்ட பலிக்கு காரணம் இது தான் என்று இமானின் முதல் மனைவி மோனிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். குறிப்பாக, அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை.

- Advertisement -

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

மோனிகா அளித்த பேட்டி:

அதோடு இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர் தான். ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நண்பர் என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் சிவகார்த்திகேயன் அக்கரையாக இருப்பார். என் மகள்களுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் அவர் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து எல்லாம் பண்ணி வைத்திருந்தார். ஒரு குடும்பம் சிதறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், நாங்கள் ஒற்றுமையாக வாழனும் என்று நினைத்து தான் சமாதானம் செய்ய சிவா முயற்சிகளை எடுத்தார்.

-விளம்பரம்-

இமான்-சிவா இடையே பிரச்சனை:

ஆனால், இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள். பொதுவாக குடும்ப நண்பர்கள் இருந்தால் நண்பரோட குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் மேலே என்ன தப்பு இருக்கு? ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணை எல்லாம் ரெடியா பார்த்து வைத்துவிட்டு தான் இமான் என்னை விவாகரத்து செய்தார். நான் முடியாது என்று சொன்னதுக்கு அரசியல்வாதிகளை வைத்து உங்க அப்பாவை கொன்னுடுவோம் என்றெல்லாம் மிரட்டல் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்து வாங்கினார்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

எனக்கு எந்த ஒரு ஜீவனாம்சமும் கொடுக்கவில்லை. காசு வேணுமா? பிள்ளைகள் வேண்டுமா? என்று கேட்டார்கள். எனக்கு பிள்ளைகள் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு எந்த ஜீவனாம்சமும் வாங்காமல் வந்துவிட்டேன். அந்த வாழ்க்கையில் இருந்து ஒன்றுமே இல்லாமல் வெளியில் இருந்து இப்ப நான் ஒரு கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன். 30 பேருக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு சுயமாக முன்னேறி என்னுடைய இரண்டு மகள்களோடு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. அதனால் தான் இப்படி எல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடி விரும்பி கொள்கிறார். அவர் இப்படி பேசுனது என்னைவிட சிவகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவர் யோசிக்கவில்லை. எங்களுக்கு நல்லது பண்ண நினைத்தவருக்கு இப்படி ஒரு சங்கடம் வந்துவிட்டது நினைத்து எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement