‘குடும்பத்தை மீண்டும் உருவாக்கியதற்கு நன்றி’ – தன் இரண்டாம் திருமணத்தின் முதல் திருமண நாளில் இமான் போட்ட பதிவு.

0
3001
Imman
- Advertisement -

தன் இரண்டாம் திருமணத்தின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இமான் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான்.

-விளம்பரம்-

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

- Advertisement -

இரண்டாம் திருமணம் செய்த இமான் :

நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான். இப்படி ஒரு நிலையில் இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இமான் திருமணம் செய்த எமிலி

இமான் திருமணம் செய்துகொண்டுள்ள பெண் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கலை இயக்குனர் உபால்ட் தமிழில் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 59வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் எமிலி.

-விளம்பரம்-

இமான் எடுத்து இருந்த முடிவு :

ஏற்கனவே, இமான் தனது மறுமணம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய போது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும்’ கூறி இருந்தார். அவர் சொன்னதை போலவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பெண்ணையே மறுமணம் முடித்துள்ளார்.

முதலாம் ஆண்டு திருமண நாள் :

இப்படி ஒரு நிலையில் தனது இரண்டாம் திருமணத்தின் முதல் திருமண நாளை முன்னிட்டு தனது இரண்டாம் மனைவி மற்றும் அவரின் மகளுடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘நாமும் நம்முடைய குடும்பமும் ஒருவரை ஒருவரை தெரிந்துகொண்டு இன்றோடு ஓராண்டுகள் ஆகிவிட்டது. எமலி, என் மனைவியாக குடும்பத்தை மீண்டும் உருவாக்கு இருக்கிறார். நேத்ரா, என்னுடைய மூன்றாவது மகள், என் வாழ்வில் நீ மகிழ்ச்சியையும் அமைதியையும் சேர்த்து இருக்கிறார். என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி ‘என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருகிறார்.

Advertisement