நடிகை இனியா ,2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் இவர் “மௌனகுரு” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அனைவரையும் வசீகரிக்க கூடிய முக அழகை கொண்டதால் அடுத்தடுத்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், இழுத்து போத்திகொண்டு நடித்தால் இவரால் முன்னனி நடிகையாக தமிழில் வளம் வரவில்லை.
இதனால் கொஞ்சம் கவர்ச்சியிலும் இறங்கினார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் வாய்ப்பும் கிடைத்து. தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தாராளமாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமே இவர் நடுவில் உடல் எடை கூடி சற்று பருமனாக மாறியது தான். ஆனால், தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான உடல் அமைப்பிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் அட்டை படத்திற்கு இவர் கொடுத்த போஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.