அமீத் பார்கவ் மனைவி ஸ்ரீரஞ்சினியை கேலி செய்த நபர். கணவராக அமித் சொன்ன பதிலை பாருங்க.

0
67077
amit bhargav
- Advertisement -

பெரும்பாலும் வெள்ளி திரை நடிகர்களுக்கு சமமாக சின்னத் திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு டிவி தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், சீரியலில் கிடைக்கும் பிரபலத்தை வைத்து இவர்களுக்கு சினிமாத் துறையில் படங்களில் நடிக்க சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்,பிரியா பவானி சங்கர் என்று சொல்லி கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகர்கள் சென்று உள்ளார்கள். அந்த வகையில் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களின் மூலம் பிரபலமானவர் அமீத் பார்கவ். மேலும், நடிகர் அமீத் பார்கவ் சில ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் சின்ன திரைக்கு அறிமுகம் ஆனவர்.

-விளம்பரம்-

பின்னர் அதே தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற தொடரிலும் நடித்தார். இப்படி சீரியலின் மூலம் கிடைத்த வரவேற்பினால் இவருக்கு சினிமாவில் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தன. மேலும்,நடிகர் அமீத் பார்கவ் அவர்கள் “என்னை அறிந்தால், குற்றம் 23,மிருதன்” போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தலைவா, தனி ஒருவன் போன்ற படங்களில் சில நடிகர்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் அமீத் அவர்கள் ரேடியோ jockey மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல குறும்படங்கள் கூட நடித்து இயக்கிய உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது.

இதையும் பாருங்க: உள்ளாடை தெரியும்படி போஸ். பழைய புகைப்படத்தை பகிர்ந்த பிக் பாஸ் அனுயா.

- Advertisement -

மேலும், இவர்களுடைய குழந்தை புகைப்படத்தை கூட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள். அதுவும் இவர்கள் குழந்தை அக்ஷய திருதி அன்று பிறந்ததாகக் கூறி சந்தோஷமாக கொண்டாடி வந்தார்கள். இதை பார்த்து ரசிகர்கள் அமித்துக்கும்,ஸ்ரீரஞ்சினிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மேலும்,இவர்கள் இருவரும் சில காலமாகவே சமூக வலைதளம் பக்கம் வராமல் இருந்தார்கள். பின்னர் இப்போது தான் சமூக வலைத் தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டு உள்ளார்கள். மேலும், அதில் அவர்கள் கூறியது, சென்னை டி.நகரில் புதிதாக ஃபன் மால் போன்று ஒன்று ஓபன் செய்யப்பட்டுள்ளார்கள்.

அதில் நிறைய புதுப் புது நிகழ்ச்சிகளும், போட்டிகளும் கூட உள்ளது. மேலும், இந்த இடத்திற்கு நாங்கள் அடிக்கடி வருவோம். நீங்களும் கண்டிப்பாக வந்து பாருங்கள் என்றும் கூறியுள்ளார்கள். மேலும்,இந்த வீடியோவை பார்த்து விட்டு ரசிகர்கள் ஸ்ரீரஞ்சினி குறித்து கமெண்ட் செய்து உள்ளார்கள். அது என்னவென்றால், அவர் வாயைத் திறந்தால் மூடாமல் நான்ஸ் டாப்பாக பேசிக் கொண்டே தான் இருப்பார். எப்படி தான் அமீத் சமாளிக்கிறாரோ? என்று கமென்ட் போட்டு இருந்தார்கள். இதைப் பார்த்துட்டு அமீத் அவர் கூறியது, அவள் இல்லனா நான் என்ன செய்வேன் என்று தெரியாது ? என்று உணர்வு பூர்வமான கருத்தையும் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement