பிஞ்சிலே பழுத்து என்று பலரை கூறி நாம் கேள்விபட்டிருக்கிறோம், அந்த கூற்றை உண்மைக்கும் விதத்தில் இருக்கிறது இந்த இளம் நடிகை சிறு வயதில் செய்த செயல். சமீபத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட இளசுகளின் ரசிகர்கள் பட்டாளம் அதிகமா இருந்து வருகிறது அதே அளவிற்கு இவருக்கு சில எதிர்ப்புகளும் இருந்து தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் தப்பில்லை என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதனை தொடந்து தான் சிறுவயதில் இருக்கும் போது அந்த மாதிரியான படங்களை பார்த்திருப்பதாக ஒரு பேட்டி ஒன்றில் இவர் கூறியுள்ளது தற்போது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் “தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே தனது கசின்களுடன் ஆபாச படத்தை பார்த்திருப்பதாகவும், அப்படி பார்க்கும் போது தனது அம்மாவிடம் மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்,”
மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் “அப்போதெல்லாம் ஆபாச படங்கள் என்பது அவ்வளவாக பிரபலம் கிடையாது, அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்த கொல்வவே அதனை எனது உறவினர் பசங்களுடன் பார்த்தேன்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே இவர் நடித்துள்ள “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட விமர்சங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் சர்ச்சையான சம்பவம் ஒன்றை தெரிவித்து ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
Also read in English about Yashika Anand