பிக்பாஸிலிருந்து இந்த வாரம் ஐஷ்வர்யா அவுட்..! வலுவான காரணம் இதோ..!

0
1083
- Advertisement -

பிக்பாஸ் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்பதாவது நாளை நோக்கி நகரும் பிக்பாஸில் இன்னும் ஓர் ஊரே உள்ளே உட்கார்ந்திருக்கிறது. சென்றாயன், ஜனனி, ரித்விகா, மும்தாஜ், யாஷிகா, ஐஷ்வர்யா, பாலாஜி இவர்களுடன் புதிதாக விஜயலட்சுமி வேறு இணைந்திருக்கிறார்.

-விளம்பரம்-

aishwarya

- Advertisement -

இன்னும் 3 வாரங்களில் எப்படி இத்தனை பேரை வெளியே அனுப்புவார்கள் எனக் கேள்வி ஒருபுறம் இருக்க, மேலும் 5 நாள்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நீடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் இருப்பவர்கள் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், விஜயலட்சுமி , ஐஷ்வர்யா. பல வாரங்கள் கழித்து ஐஷ்வர்யா நாமினேசன் பட்டியலுக்கு வந்திருக்கிறார். இதற்கு முன், ஒவ்வொரு முறையும் ஐஷ்வர்யா காப்பாற்றப்பட்டுக்கொண்டே வந்தார்.

-விளம்பரம்-

Aishwarya

நாமினேசன் பட்டியலில் இருக்கும் ஜனனி காப்பாற்றப்பட வேண்டுமெனில் பாலாஜி மொட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என டாஸ்க் அளித்தார் பிக்பாஸ். அதை, பாலாஜி செய்துவிட்டதால், நாமினேசனிலிருந்து ஜனனி விலகிவிட்டார். அது, இன்றிரவு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். அதற்குரிய ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

மீதமிருக்கும் நால்வரில், மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐஷ்வர்யா இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நம்பினா சந்தோஷமா இருக்குல்ல, நம்புங்க பாஸ்). கடந்த சில வாரங்களாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதையும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

aishwarya-dutta

பிற ஆன்லைன் சர்வேக்கள், ஏன் நாம் தினமும் வெளியிடும் சர்வேயிலும் கூட 66% பேர் ஐஷ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

எப்படியும் சனிக்கிழமை கமலின் வார இறுதி ஷூட்டிங் முடிந்தவுடன், யார் எவிக்டட் எனச் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பிக்கும். அதுவரையில் ஐஷ்வர்யா என்றே நினைத்து வாக்குகளை அளிப்போம்.

ஜெய் பிக்பாஸ்!

Advertisement