ஈஷா மையம் எந்த ஒரு இடத்தையும் ஆக்கிரமித்து கட்டவில்லை. சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். – ஈஷா மைய நிர்வாகி தினேஷ் ராஜா.

0
612
- Advertisement -

கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி உட்பட தான் ஆதியோகி சிலை ஆகியவற்றை கட்டியுள்ளோம் என ஈஷா மைய நிர்வாகி தினேஷ் ராஜா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தின் சிறந்த ஆன்மிக தலமாக விளங்குவது கோவையில் உள்ள ஈஷா மையம். தற்போது அது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் கோவையில் உள்ள ஈஷா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள  கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதியோ தடை இல்லை சான்றுகளும் முறையாக பெறவில்லை என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது.

-விளம்பரம்-

ஈஷா மையம் வழக்கு:

2017ஆம் ஆண்டு தமிழக அரசு நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆதி யோகி ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிகள் மீறி கட்டடங்கள் கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இதை எதிர்த்து ஈஷா  மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கானது நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் ஆதிகேசலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

- Advertisement -

ஆதி யோகி சிலை அமைக்கபட்டதற்க்கான நோக்கம் தொடர்பாக அணைத்து ஆவணங்களையும் தாக்கல் உத்தரவு பிறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின்  நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில், திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடமும் அலுவலகத்திலோ இல்லை. மேலும் இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.

வழிபாட்டு தளத்திற்க்கான மாவட்ட ஆட்சியரிடம் எந்த ஒரு தடையில்லா சான்றும் சுற்று சூழல்மாசு கட்டுபடுக்கான வாரிய சான்றிதழும் வழங்க படவில்லை என்றும் மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமும் எந்த ஒரு தடையில்லா சான்றிதழும் ஈஷா யோகா மையம் அறக்கட்டளையால் பெறபடவில்லை என்றும் பட்டியலில் தரப்பட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடமும் உள்ளது. ஈஷா மையம் கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா யோகா மையம் நிர்வாகி எந்த ஒரு சான்றிதழும் பெறவில்லை.

-விளம்பரம்-

அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை” என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் ஆதிகேசலு அமர்வு, மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் சம்மந்தப்பட்ட கட்டடம் கட்டுவதற்கான  எந்த ஒரு அனுமதியும் தரப்படவில்லை என்று தெரிய வந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.

விளக்கம் அளித்த ஈஷா

கோவையின் மிக முக்கிய ஆன்மிக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம். அது கட்டிடம் இல்லை சிலை அமைக்க அதிகாரம் மாவட்ட ஆட்சியர்க்கு தான் உள்ளது. எனவே அது DTCP வரம்புக்குள் வராது. ஈஷா யாருடைய நிலதையும் ஆக்கிரமித்து கட்டவில்லை. மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கரில் ஏதும் ஆக்கிரமித்து காட்டவில்லை பொய்யனான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் ஈஷா தரப்பில் ஈஷா மைய நிர்வாகி தினேஷ் ராஜா.

Advertisement