இதனால் தான் நான் உடல் எடையை குறைத்தேன் – ரொம்ப எமோஷனலாக ஐஸ்வர்யா மேனன் பதிவிட்ட பதிவு

0
635
iswarya
- Advertisement -

தன்னுடைய உடல் எடையால் சிறு வயதில் பட்ட அவமானங்கள் குறித்து நடிகை ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவர் சிறு வயதிலேயே தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். தற்போது இவர் கேரளாவில் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் 2012 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் தமிழில் 2013 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியாகியிருந்த தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படி ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரை பற்றி பெரிதாக மக்கள் மத்தியில் பேசவில்லை. அதே வருடத்தில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து இருந்தார். அதன் பின் இவர் 2013 ஆம் ஆண்டு தசவாலா என்ற படத்தில் நடித்து கன்னட திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

ஐஸ்வர்யா மேனன் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 என்ற படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்கள், வீடியோக்கள் என சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா மேனன் பதிவிட்ட பதிவு:

அதிலும், இவர் அதிகமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்வதற்கான காரணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், நான் பள்ளிப்பருவத்தில் மிகவும் குண்டாக இருந்தேன். இதனால் அனைவராலும் கேலி செய்யப்பட்டேன். என்னை குண்டாக மற்றும் மைதா உருண்டை போல உருண்டையாக இருக்கிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். எப்போதுமே என்னை கேலி செய்து கொண்டே இருப்பார்கள். என்னை பார்த்து சிரிப்பார்கள். இதனால் நான் மிகவும் மனதளவில் காயம் அடைந்தேன்.

-விளம்பரம்-

உடற்பயிற்சி செய்ய காரணம்:

அப்போது நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். பலரும் என்னை கேலி செய்ததற்கு நான் பதில் அளிக்கவும் இல்லை. அப்படி கிண்டல் அடித்தாலும் நான் சிரித்து விட்டு சென்று விடுவேன். பின் குண்டான பெண்ணாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தான் நான் உடற்பயிற்சி பயணத்தை தொடங்கினேன். நான் 16 வயதில் இருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு கேலியையும் நான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான ஆக்கபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அன்றிலிருந்து மிகவும் கடினமாக உழைத்தேன். ஒல்லி ஆவதற்கு அனைத்து விதமான டயட் முறைகளையும் பாலோ செய்தேன்.

நன்றி சொன்ன ஐஸ்வர்யா மேனன்:

பின் நானே அதிர்ச்சி அடையும் வகையில் ஒல்லியானேன். ஒரு கட்டத்தில் நான் மற்றவர்களை கவரவும் விரும்பவில்லை, நான் ஒல்லியாக இருக்க விரும்பவில்லை. ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்க விரும்புவதை உணர்ந்தேன். அதற்கு பிறகு தான் ஒல்லியாக மாறாமல் பிட்டாக மாறுவதற்காக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னை கேலி செய்தவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் என்னை தாழ்த்தி அவமானப்படுத்தி இருந்ததனால் தான் நான் தற்போது பிட்டாக இருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார நன்றிகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement