நான் தனிமை படுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் வதந்தியால் ஜாக்கிசான் பதிவு.

0
1021
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் 35,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிற நாடுகள் சீனாவுடன் கொண்ட போக்குவரத்து தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்து உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 915 பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். அதோடு இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மென்மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவசர அவசரமாக ஆயிரம் படுக்கைகளுடன் 2 தற்காலிகமாக மருத்துவமனைகளையும் உருவாக்கியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிஜான் அவர்கள் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இணையத்தில் வதந்திகள் பரவியது. இதனால் அதிர்ந்து போன ஜாக்கி சான் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், உங்களின் அனைவரின் அக்கறைக்கும் நன்றி. நான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் தனிமை படுத்தப்படவில்லை. அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for jackie chan coronavirus

-விளம்பரம்-

ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ஜாக்கி சான். ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்பை சேர்ந்தவர்களோ இந்த கரோனா வைரசுக்கு மாற்று மருந்து கண்டு பிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பேன். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் சீக்கிரம் குணமடையவும், யாரும் இதனால் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளேன் என்று கூறியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement