என் Feelingசோட விளையாடி,வாழ்க்கையையே நரகமாக்கினார் – சுகேஷ் மீது ஜாக்குலின் புகார்

0
367
- Advertisement -

சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி வழக்கில் குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக கட்சி பிளவு பட்டிருந்தது.

-விளம்பரம்-
jacquelineSukesh

இதனால் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் சுகேஷ் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பது மத்திய அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது. இதனால் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்னை, பெங்களூரு உட்பட சுகேஷ் பங்களாக்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 15 சொகுசு கார்கள் என பலவற்றை பறிமுதல் செய்தனர்.

- Advertisement -

நடிகை ஜாக்குலின் :

சுகேஷ் மீது மோசடி வழக்கு: இதனிடையே சிறையில் இருந்தவாறே சுகேஷ் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுமார் 200 கோடி பண மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். மேலும், இவருக்கு தொடர்புடைய காதலி, பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. பின் பண மோசடி வழக்கில் சுகேஷ் உள்பட 6 பேர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளார்கள்.

இந்த நிலையில் தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கொடுத்திருக்கும் வாக்குமூலம் நீதி மாற்றத்தில் தாக்கல் செய்யயப்பட்டுள்ளது. அவர் கூறுகையில் `சுரேஷ் தன்னுடைய வாழ்வாதாரத்தையும், தொழிலையும் நாசமாக்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜாக்குலின். சுரேஷ் தன்னை அரசு அதிகாரி என்றும், உள்துறை அமைச்சகத்தில் முக்கிய நிர்வாகி என நம்பவைத்துள்ளார். அதனை நம்பி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பேச ஆரம்பித்திருக்கிறார்.

-விளம்பரம்-

செயலலிதா உறவினர் எனக்குரிய சுரேஷ் :

அதற்கு பிறகு தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் உறவினர் என்றும், சன் டிவியின் உரிமையாளர் நான் உங்களுடைய ரசிகர் என்றும் ஆசை வார்த்தையில் பேசியுள்ள சுரேஷ், நடிகை ஜாக்குலினை தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும். சன் டிவியின் உரிமையாளர் என்பதினால் பல படங்களை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படங்களில் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து பணஉதவி :

இதனால் தினமும் இரண்டு, மூன்று முறை போனில் பேசிக்கொண்டு வந்திருக்கின்றனர். தொடர்ந்து காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளிலும் போனில் பேசி வந்திருக்கிறார். ஆனால் தனக்கு சுரேஷ் ஒரு முறை கூட சிறையில் இருந்து பேசுகிறார் என்று தெரியாதாம். கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பேசியுள்ளார். பின்னர் தான் சுரேஷ் சட்ட சமைச்சக அதிகாரி என்ற பெயரில் சிறையில் இருப்பதை தெரிந்துகொண்டுள்ளார். பிங்கி இரானியும், சுரேஷும் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

ஹெலிகாப்டர் கொடுத்த சுரேஷ் :

சுரேஷ் உண்மையான பெயரே அவர் குற்றவாளில் என்ற பிறகுதான் தெரிய வந்தது என்றும். பிங்கிக்கு அனைத்தும் தெரிந்தும் தன்னிடம் அந்த தகவலை மறைத்தாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கேரளாவிற்கு செல்லும் போது தன்னுடைய விமானத்தை பயன்படுத்தும்படியும், ஒரு ஹெலிகாப்டரையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இரண்டு முறை அவருடைய விமானத்தில் சென்று வந்தாக கூறியுள்ளார் நடிகை ஜாக்குலின்.

வெளிநாட்டிற்கு செல்ல முயலும் ஜாக்குலின் :

இந்நிலையில் தான் நடிகை ஜாக்குலினிற்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினருக்கும் பண உதவி செய்துள்ளார் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்போது ஜாக்குலின் வெளிநாடு செல்ல வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement