கணவரின் படுகொலைக்காக போராடிய பெண் – தமிழகத்தை உலுக்கிய மற்றொரு உண்மை சம்பவத்தை எடுக்கும் ஜெய் பீம் இயக்குனர்.

0
399
- Advertisement -

மீண்டும் சர்ச்சைக்குரிய கதையை ஜெய்பீம் பட இயக்குனர் இயக்க உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஞானவேல். இவர் நடிகர் அசோக்செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஜெய் பீம் படம் இயக்கி இருந்தார். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார்.

- Advertisement -

ஜெய் பீம் படம்:

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் வெளிவந்து மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

கணவர் தண்டபாணியுடன் ஜீவஜோதி

ஜெய் பீம் படம் குறித்த சர்ச்சை:

அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இந்த படம் குறித்த சர்ச்சை முடியவில்லை. இருந்தாலும், ‘ஜெய்பீம்’ பல பிரிவுகளில் விருது பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
ராஜகோபால்

ஞானவேலின் அடுத்த படம்:

இயக்குனர் ஞானவேலின் அடுத்த படம் தற்போது தயாராகி வருகிறது. அவர் கையில் எடுத்துள்ள அடுத்த படமும் சர்ச்சைக்குரிய கதைக்களம் தான். அதாவது, மறைந்த தொழில் அதிபரான சரவணபவன் ராஜகோபால் வழக்கை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. 2001 ஆம் ஆண்டு ஜீவஜோதி எனும் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் நோக்கில் அவரது கணவரை கடத்தி கொலை செய்ததாக ராஜகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு ராஜகோபால் காலமானார்.

ராஜகோபால் வழக்கு கதை:

இந்த வழக்கில் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தையும், அவர் சந்தித்த பல இன்னல்களையும் மையமாக வைத்து தான் இந்த படம் தற்போது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்க்லீ பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்குச் சம்மதம் தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவஜோதி ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement