‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ – விஜய்யை தாக்கி பாடல் வரிகளை எழுதினேனா ? ஜெயிலர் ‘ஹுக்கும்’ பாடலாசிரியர் விளக்கம்.

0
2195
Jailer
- Advertisement -

விஜய் குறித்து ஜெயிலர் படம் பாடலாசிரியர் சுப்பு அளித்து இருக்கும் பேட்டி பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் பாடல்:

அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது.

-விளம்பரம்-

குறிப்பாக, இந்த பாடலில் வரும் ‘ உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் பக்காவாக ரஜினிக்கு பொருத்தமானதாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் சுப்பு அவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.

அதில் அவர், இந்த பாடல் கண்ணாடி போன்று. அவரவர்கள் என்ன நினைத்து பார்க்கிறார்களோ அதுதான் தெரியும். எனக்கு இந்த பாடலில் என் தலைவருடைய கெத்து தான் தெரிகிறது. நான் கெத்து என்று சொன்னால் அது என்னுடைய தன்னம்பிக்கை. நீ வெத்து என்று சொன்னால் அது தவறு. நான் கெத்து சொல்வதனால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் கூறுவது தவறான ஒன்று. மற்றபடி எனக்கு என் தலைவனுடைய கெத்து மட்டும்தான் இந்த பாடலில் தெரிகிறது.

என்னுடைய அப்பா சூப்பர் என்று நான் சொல்லலாம். அதை சொல்லக்கூடாது என்று யாரும் என்னிடம் சொல்ல முடியாது. எனக்கு எப்போதுமே தலைவர் சூப்பர் ஸ்டார் தான். இது உலகத்துக்கே தெரியும். அதோட விஜய் சாரே ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்வார். உண்மையிலேயே இதை ஒரு பிரச்சனையாக பார்த்தால் பிரச்சனை தான். பிரச்சனை செய்ய வேண்டும் என்று இதை சிலர் செய்கிறார்கள். மேலும், பாடல் வரிகளை கேட்டுவிட்டு ரஜினி சார் “இந்த பாடல் பேன்ஸ் மத்தியில் வேற லெவெலில் போகும் சுப்பு ” என்று வாய்ஸ் நோட் மூலம் என்னை வாழ்த்தினார் என்று ஹுக்கும் பாடலின் லிரிசிஸ்ட் கூறினார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement