பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கபட்டிருந்தார். அவருக்கு 50 லட்ச பணமும் பிக் பாஸ் பட்டத்திற்கான கோப்பையும் வழங்கபட்டது. மேலும்,இந்த சீசனில் இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா பிடித்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து 3 நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரித்விகா தனது சக போட்டியாளரான மஹத், ஐஸ்வ்ர்யா, ஜனனி ஆகியோருடன் இணைத்து சமீபத்தில் வெளியாகியுள்ள “செக்க செவந்த வானம்” திரைப்படத்திற்கு சென்றுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள “செக்க செவந்த வானம்” திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தை காண மஹத், ஐஸ்வ்ர்யா, ஜனனி, ரித்விகா ஆகியோர் ஒரு பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் எதிர்பாரதா விதமாக நடிகர் சிம்புவும், நடிகர் ஹரிஷ் கல்யாணம் அதே திரையரங்கிற்கு வந்துள்ளனர். பின்னர் அனைவரும் இணைந்து ஒன்றாக புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.