சிம்பு படத்துல நடித்தால் நான் நடிக்க மாட்டேன்னு சொன்னேனே ? சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் முக்கிய பிரபலம்.

0
463
simbu
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று எழுந்த சர்ச்சைக்கு ஜெயம் ரவி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். இவர் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது.

படத்தின் டீசர் :

இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் சந்திப்பு:

அதன் முதற்கட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், திரிஷா, மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள். அப்போது ஜெயம் ரவியிடம் செய்தியாளர் ஒருவர், சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்தால் நீங்கள் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வந்தது. அது உண்மையா? என்று கேட்டிருந்தார்.

ஜெயம் ரவி கொடுத்த பதிலடி:

அதற்கு ஜெயம் ரவி கூறியிருந்தது, இப்படி ஒரு செய்தி சோசியல் மீடியாவில் உலவிய போது சிம்புவே எனக்கு கால் செய்து நான் படத்தில் இருக்கேன் என்று தெரிந்தால் சந்தோஷப்படுகிற முதல் நபர் நீ தான். ஆனால், இவர்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே என சிம்பு கூறியதாக ஜெயம் ரவி கூறி இருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement