இரண்டு மகள்களை பெற்றெடுத்த பின்னரும் அதே அழகுடன் இருக்கும் இதயத்திருடன் பட நடிகை – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0
554
- Advertisement -

நடிகை காம்னா மகள்களின் புகைப்படம் முதன்முறையாக சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள் தான் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த பல நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது. அப்படி சினிமாவை விட்டு பல்வேறு நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தவகையில் சினிமாவை விட்டு விலகி போனவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதை திருடிய நடிகை காம்னா தான். இவர் என்ன ஆனார்? என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

-விளம்பரம்-

நடிகை காம்னா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். மேலும், கல்லூரி படிக்கும் போதே காம்னா மாடலிங் செய்து இருந்தார். பின் இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பட்டத்தையும் பெற்று இருந்தார். அதனை தொடர்ந்து இவர் விளம்பரப் படம், ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு 2005 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பிரேமிக்குலு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர் இயக்குனர் சரன் பார்வையில் விழுந்ததால் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இருந்தார்.

- Advertisement -

நடிகை காம்னா திரைப்பயணம்:

மேலும், சரண் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருந்தார் காம்னா. ஆனால், அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து நடித்து இருந்தார் காம்னா. மேலும், இதய திருடன் படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், அந்தப் படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருந்தது.

நடிகை காம்னா திருமணம்:

அதன் பின்னர் ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடிகை காம்னா நடித்து இருந்தார். இருப்பினும் இவர் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து இருந்தார். பிறகு நடிகை காம்னா அவர்கள் 2014 இல் பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுங்கு படத்தில் நடிகை காம்னா நடித்து இருந்தார். பின்னர் இவர் குழந்தைக்கு தாயானதால் சினிமாவில் நடிப்பதை சிறிது ஆண்டுகள் நிறுத்தி வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

காம்னா நடித்த கடைசி படம்:

இறுதியாக 2019 ஆம் ஆண்டு கூட இவர் கருடா என்னும் கன்னட படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. குழந்தை பிறந்த பின்பு கூட காமினி அந்த படத்தில் நடித்து இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கூட இவர் பெரிதாக ஆக்ட்டிவாக இல்லை. தற்போது இவருக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள் உள்ளார்கள். பின் நடிகை காம்னா சினிமாவிலிருந்து சுத்தமாக வெளியேறி விட்டார்.

நடிகை காம்னா மகள்களின் புகைப்படம்:

இதனால் அவ்வளவாக இவரை மக்களும் பின்தொடர்வதில்லை. இந்த நிலையில் நடிகை காம்னா மகள்கள் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், அன்னையர் தின ஸ்பெஷலாக காம்னா தனது மகள்கள் இருவருடனும் எடுத்து அழகிய புகைப்படத்தைப் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகை காம்னாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா! எவ்வளோ அழகாக இருக்கிறார்கள் என்று வியந்து லைக்ஸ்குகளையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement