அருள்மொழிவர்மனாவே மாறிட்டாரு – கொரோனா நிதி குறித்து கேட்ட கேள்விக்கு ஜெயம் ரவி அளித்த பதில். பாராட்டும் நெட்டிசன்கள்.

0
2492
jayamravi
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

-விளம்பரம்-

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். 

இதையும் பாருங்க : ஆரியுடன் நெடுஞ்சாலை படத்தில் நடித்த நடிகையா இது ? புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

- Advertisement -

நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், அஜித் என்று பலர் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்கி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜெயம் ரவி, முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி அளித்தார்.

அதன் பின்னர் வெளியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, முதலைச்சரை சந்தித்து என்னால் முடிந்த நிதியை அளித்து இருக்கிறேன். இது மிகவும் கடினமான தருணம் எல்லாரும் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், எவ்ளோ அமௌன்ட் கொடுத்தீங்க என்று கேட்டதற்கு, சொல்லணும்னு இல்ல, என்னால எவ்ளோ முடியுமோ கொடுத்திருக்கேன் என்று சிரித்த முகத்துடன் பதில் அளித்து சென்றார் ஜெயம் ரவி.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஜெயம் ரவியின் இந்த தன்மையான பதிலை பாராட்டி வரும் ரசிகர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்ட பத்திரிகையாளரையும் விமர்சித்து வருகின்றனர். ஜெயம் ரவி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 10 லட்சம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement