காஞ்சனாவை தொடர்ந்து ‘ஜிகிர்ந்தண்டா’ படத்தையும் விட்டு வைக்காத அக்ஷய் குமார் – ட்ரைலரை பார்த்து தமிழ் ரசிகர்களின் ரியாக்ஷன்.

0
659
- Advertisement -

ஜிகர்தண்டா இந்தி ரீமேக்கில் வெளியான ட்ரெய்லரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உட்பட பலர் நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம். மேலும், அசால்ட் சேதுவாக இந்த படத்தில் பாபி சிம்ஹா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பொதுவாகவே சினிமா உலகில் பிறமொழி படங்களை தமிழ் மொழியிலும் ரீமேக் செய்வதும், தமிழ் மொழி படங்களை பிற மொழிகளிலும் ரீமேக் செய்வதும் வழக்கமான ஒன்று. இது காலங்காலமாக நடந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

ஜிகர்தண்டா படத்தை ஹிந்தியில் ரீமேக்:

அந்த வகையில் தற்போது ஜிகர்தண்டா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். “Bachchan Pandey” என்று இந்த படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் அக்ஷய்குமார், Kriti Sanon, Jacqueline Fernandez உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அக்ஷய் குமார் படத்தில் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் விமர்சித்து பதிவு போட்டு வருகிறார்கள்.

அக்ஷய் குமாரின் ஹிந்தி ரீமேக் படம்:

பலரும் அக்ஷய் குமாரின் டிரைலரை கிண்டல் கேலி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அக்ஷய்குமார் தமிழில் வெளிவந்த காஞ்சனா 2 படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வந்த லக்ஷ்மி பாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்போது அக்ஷய்குமாரை பயங்கரமாக பலரும் கேலி செய்து இருந்தார்கள். தற்போது ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கிறார் என்றவுடன் இன்னும் கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் அக்ஷய் குமார் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சூரரைப்போற்று படம்:

இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் வெளியானது.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஊர்வசி உட்பட பலர் நடித்து இருந்தனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தனர். டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருந்தனர்.

சூரரைப்போற்று இந்தியில் ரீ – மேக்:

தற்போது இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய இருக்கின்றனர். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதே போல சூரரை போற்று படத்தில் எந்த ஒரு சண்டை காட்சிகளும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இந்தி ரீ- மேக்கில் சண்டை காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய சுதா, இந்தி ரீ – மேக்கில் அந்த ரசிகர்களுக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை செய்து இருப்பதாகவும் படத்தில் இரண்டு சண்டை காட்சிகளை வைத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். பொதுவாக அக்ஷய் குமார் ஆக்ஷனுக்கு பேர் போனவர். இவரது பல படங்களில் இவர் பல ரிஸ்க்கான ஸ்டண்ட்களை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement