பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை செய்தார் – முன்னாள் கணவர் மீது புகார் அளித்த பிரபல நடிகை. (இந்த நடிகரா இப்படி)

0
780
Actress
- Advertisement -

பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமைப் படுத்தியதாக முன்னாள் கணவர் மீது பிரபல நடிகை புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஜானி டெப். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் இவர் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார். மேலும், கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற பெயரை அறியாத உலக சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானவர் நடிகர் ஜானி டெப்.

-விளம்பரம்-

இவர் கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனை தொடர்ந்து இவர் அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார் ஜானி டெப். ஆனால், திருமணமான இரண்டே ஆண்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

- Advertisement -

அம்பெர் ஹெர்ட் -ஜானி டெப் திருமணம்:

பின் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் தன்னை துன்புறுத்தி கொடுமை படுத்தி உள்ளார் என்று பிரபல நடிகை அம்பெர் ஹெர்ட் அளித்துள்ள புகார் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருவரும் மாற்றி மாற்றி ஆதாரங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

அம்பெர் ஹெர்ட் -ஜானி டெப் விவகாரம்:

அதோடு இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் மோதிக்கொள்ளும் சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வழக்கு சூடு பிடித்திருக்கிறது. அதிலும் அம்பெர் ஹெர்ட் படுக்கையிலேயே மலம் கழித்து விட்டார் என்று ஜானி டெப்பும், ஜானி டெப் சிறுநீரால் தனது பெயரை எழுதினார் என்று அம்பெர் ஹெர்ட் மாற்றி மாற்றி நீதிமன்றத்தில் அசிங்கம் படுத்தி கொள்கின்றனர். இதனால் இவர்களுடைய வழக்கு ஹாலிவுட் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி உள்ளது.

-விளம்பரம்-

அம்பெர் ஹெர்ட் அளித்த புகார்:

இந்த நிலையில் நேற்று நடத்திய விசாரணையில் நடிகை அம்பெர் ஹெர்ட் தன்னுடைய முன்னாள் கணவர் தனது விரலை துண்டித்து இருப்பதாகவும், தனது பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை படுத்தியதாகவும், 350 கோடி ரூபாய் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். மேலும், இது குறித்து அம்பெர் ஹெர்ட் கூறியது,

கோர்ட்டில் அம்பெர் ஹெர்ட் கூறியது:

ஆஸ்திரேலியா சுற்றுலா சென்றிருந்த போது தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலில் சொருகி பாலியல் ரீதியாக கடுமையான டார்ச்சர் செய்தார். மற்றவர்களைப் போல நானும் ஜானி நல்லவர் என நம்பி தான் திருமணம் செய்தேன். ஆனால், குடிபோதையில் அவர் கொடுக்கும் டார்ச்சர் பிடிக்காமல் போனதால் தான் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது இன்னும் ஒரு சில வாரங்களில் தீவிரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து நடிகர் ஜானி டெப் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் விமர்சித்தும், கண்டனங்களையும் தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement