விஜய் டீவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி செய்த அட்டகாசங்கள் பேசிய பொய்கள் காயத்ரிக்கு அடிமை போல நடந்துகொண்ட விதம் யாவரும் அறிந்ததே.
இதன் காரணங்களாலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தவர் ஜுலி. தமிழகத்தில் தற்போது ஜூலி என்றால் பெரும்பாலோனோருக்கு தெரியும்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி பேட்டி அளித்து வருகின்றார்.அதில் ஒரு பேட்டியில் தன்னை மிரட்டியவர்கள் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டிற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் எத்தனை கோடி தெரியுமா.!
அதில் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் பின்புலம் கொண்டவர்கள், அதனால் தான் அவர்களை கலாய்க்கவோ திட்டவோ கொஞ்சம் தயங்குகின்றார்கள்.
ஆனால், நான் சாதரண குடும்பத்து பெண்.என்னை எது செய்தாலும் கேட்க யாருமில்லை, அதனால் தான் இப்படி சீண்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தார் பல இன்னல்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்