சூர்யா ரொம்ப நல்லவர், ஆனால் நான் – திருமணத்திற்கு பின் பாலியல் ரீதியான பாகுபாடு பற்றி ஜோதிகா சொன்னது

0
149
- Advertisement -

திருமணத்திற்குப் பின் தான் எதிர்கொண்ட பாலியல் பாகுபாடு குறித்து நடிகை ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஜோதிகா திரைப்பயணம்:

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார்.
சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே ஜோதிகா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜோதிகா படங்கள்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் தமிழில் லயன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் ஷபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜோதிகா பேட்டி:

இந்த படம் நெட்பிளிக்சில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்
சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு தான் எதிர் கொண்ட பாலியல் பாகுபாடு குறித்து ஜோதிகா சொன்னது, இது சாதாரண விஷயம்தான். என்னதான் நான் ஒரு நடிகரை திருமணம் செய்திருந்தாலும் நானும் நிறைய பாலியல் பாகுபாடுகள் எல்லாம் எதிர்கொண்டு இருக்கிறேன். சூர்யாவை திருமணம் செய்து கொண்டது நான் செய்த அதிஷ்டம் என்று சொல்வார்கள். காரணம், எல்லோருமே சூர்யா ரொம்ப நல்லவர் என்பார்கள்.

பாலியல் பாகுபாடுகள்

அவர் எப்போதும் மனைவியைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள நான் தான் அதிர்ஷ்டம் செய்தவள் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது திருமண வாழ்க்கையில் மட்டும் இல்லை ஒரு சாதாரண விஷயத்தில் கூட நடக்கிறது. ஒரு கார் வாங்கினால் அந்த கார் சாவியை வாங்கிய உடனே அதில் இருக்கும் விஷயத்தை பற்றி எல்லாம் நாம் சரி பார்ப்போம். இது நம் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியாக இப்ப மாறி விட்டது. மேலும், ஒரு பெண்ணாக என்னுடைய முடிவுகளை இப்போது நான் எடுக்கிறேன். சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். பாலிவுட்டில் நடித்ததால் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்ததா? என்று தெரியவில்லை. நான் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement