இது தெரியாத நீங்க,அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப் போறீங்க – லியோ ட்ரைலர் சர்ச்சை குறித்து காடுவெட்டி குரு மகள்.

0
1868
- Advertisement -

விஜய் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயின் லியோ படம் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

- Advertisement -

லியோ ட்ரைலர்:

இதனை தொடர்ந்து லியோ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி இருந்தது. தற்போது டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் லியோ ட்ரைலரில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வகையில் இருப்பதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நடிகர் விஜய் அவர்களின் லியோ படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் லியோ படத்தின் படக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அவர்கள் சினிமா நடிக்கட்டும், பணம் சம்பாதிக்கட்டும், என்னவோ பண்ணட்டும்.

விருதாம்பிகை பதிவு:

அதில் எந்த பிரச்சினையும் யாருக்கும் இல்லை. அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை வைத்து டாக்டர் திரு.பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்களை முன்னிருத்தும் நீங்கள் லியோ படத்தின் முன்னோட்டத்தில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வார்த்தையை கூறி பெண்களை இழிவு செய்வது நியாயமா? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கமா? கடுமையான வார்த்தைகளில் கூறி தான் ஆக வேண்டும்.

-விளம்பரம்-

ட்ரைலர் குறித்த சர்ச்சை:

உங்கள் வீட்டிலும் பெண்ணாக உங்களுடைய தாய், மனைவி, மகள் உள்ளார்கள். அவர்களையும் அந்த வார்த்தைகளில் தான் நீங்கள் அழைப்பீர்களா? படத்திற்கு வசனம் தேவைப்பட்டால் எவ்வளவோ வார்த்தைகள் தமிழ் மொழியில் உள்ளன. விளம்பர நோக்கத்திற்காக அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள் உங்களை பின் தொடரும் ரசிகர்களை எவ்வாறு வழி நடத்துவீர்கள். மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட பெண்களை மதிக்காத நீங்கள் அரசியலுக்கு வந்து என்ன கிழிக்க போகிறீர்கள்.

விஜய் குறித்து சொன்னது:

சினிமாவுக்காக தான் அந்த வார்த்தையை கூறினேன் என்று நீங்கள் நாளைக்கு உங்கள் மக்கள் தொடர்பு நிர்வாகியை வைத்து சப்ப கட்டு கட்டலாம். அந்த வார்த்தை எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்த முடியும். ஒரு இழிவான விடயத்தை சொல்வதற்கு பெண்களின் உறுப்புகளை தான் குறிப்பிட வேண்டுமா? தமிழ் கலாச்சாரத்தில் மரணத்தைக் கூட நன்மரணம் என்று அழைப்போம். எந்த வார்த்தையும் யாரையும் காயப்படுத்த கூடாது என்பதற்காக அமங்கலமாக சொல்லாமல் மங்கலமாக சொல்ல வேண்டும் என்பது தமிழர்களின் மாண்பு. நீங்கள் ஆயிரம் காரணம் கூறினாலும் நீங்கள் பேசிய வார்த்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உண்மையில் உங்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருந்தால் உடனடியாக பெண்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement