பாவாட தாவணி எல்லாம் சீரியலில் தான் – நிஜத்தில் கண்மணி எப்படி இருக்கார் பாருங்க.

0
2989
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே சஞ்சீவ் நடித்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதனால் தற்போது சஞ்சீவ் நடித்து வரும் காற்றின் மொழி தொடரில் ராஜா ராணி தொடரில் சஞ்சீவி ற்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்குள்ளாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதால் தற்போது சஞ்சீவ் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகியிருக்கிறார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் புதிதானவர் தான்.காற்றின் மொழி தொடரில் அழகிய கிராமத்து தோற்றத்தில் இருக்கும் இவர் நிஜத்தில் படு மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். இவரது சமூக வளைதள பக்கத்திலும் படு மாடர்ன் கோலத்தில் பல புகைப்படங்கள் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement