நன்றாக சென்று கொண்டு இருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.

0
4884
kaatru
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் காற்றுக்கென்ன வேலி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தான் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலின் கதைகளம் இன்றைய பெண்களின் நிலைமையை எடுத்து சொல்வதால் மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே இடத்தை பிடித்தது. இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது. இருந்தும் சில இடங்களில் பல பெண்கள் சாதனை செய்து வருகிறார்கள். அதிலும் ஒருசில இடங்களில் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

அதை முறியடிக்கும் வகையில் இந்த சீரியல் அமைந்துள்ளது. நாட்டில் பல இடங்களில் பெண்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு வருகிறார்கள். வெளியில் செல்வதற்கு,படிப்பதற்கு போன்ற பல பிரச்சனைகளை தினம்தினம் சந்தித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதை மையமாக வைத்துக் கொண்டு வரப்பட்ட சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி சீரியல்.

இதையும் பாருங்க : விவாகரத்து விவகாரம் – நாய் புகைப்படத்தை போட்டு மீடியாவை கலாய்த்த சமந்தா.

- Advertisement -

எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி சொல்வது. இந்த சீரியலில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த சீரியலில் மக்களுக்கு பரிச்சயமான முகம் என்றால் அது நடிகை மாளவிகா தான். இவர் சாரதா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு அம்மா ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிக்க கமிட்டாகி உள்ளாராம். படிக்க போராடும் பெண்ணுக்கு துணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் மாளவிகா நடித்தார். ஆனால், ஏன் இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தினார் என்பது தெரியவில்லை. இது குறித்து காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்கள் பல கேள்விகளை சோசியல் மீடியாவில் எழுப்பி வருகின்றனர். நடிகை மாளவிகா அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

-விளம்பரம்-
Advertisement