ஏன் இப்படி ஒரு ஆடை. கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்

0
80188
Shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
View this post on Instagram

Looking back to my Pictures ?❤️?

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

இந்த தொடரில் நடித்து வந்த ஷிவானி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் துவங்கிய ‘கடைக்குட்டி சிங்கம் ‘ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஷிவானி. ‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறிஇருந்தார்.

- Advertisement -

என்ன காரணமாம்? ஷிவானி தரப்பில் பேசிய போது, வெளியேறியதை மட்டும் ஒப்புக் கொண்டு ‘கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசுகிறோம்’ கூறி இருந்தார்.பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியல்களில் படு குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஷிவானி நிஜத்தில் படு மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவரது சமூக வலைத்தளம் முழுக்க புகைப்படங்கள் குவிந்து கிடக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனது பின்புறம் தெரியும்படியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் ஷிவானி. இதனை கண்ட ரசிகர்கள் இப்படியெல்லாம் புகைப்படம் போடாதீர்கள் என்று அன்பு வேண்டுகோளை கோரியுள்ளார்கள்.

Advertisement